தென்பெண்ணை ஆற்றில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர காலத்தின் நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் நடந்த தொல்லியல் கள ஆய்வின்போது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர காலத்தின் நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயம், 2ஆம் தேவராய மன்னரின் படைத்தளபதியும், கீழ்தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த லக்னதண்ட நாயக்கர் என்பவரின் நாணயம் என அறியப்பட்டுள்ளது.