மத்திய அரசு ரயிவே துறையை தனியாரிடம் தாரைவார்ப்பதை கண்டித்தும், தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் செய்ததை கண்டித்தும் திருப்பத்தூர் டிஆர்இயூ கிளை சார்பில் தலைவர் எல்.வி.சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் சி.முத்துக்கிருஷ்ணன், சிபிஎம் திருப்பத்தூர் தாலுக்கா செயலாளர் ஞானசேகரன், துணைச் செயலாளர் சி.ரவி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.