வடசென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வடசென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் உரிய அனுமதியின்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. இதை அடுத்து தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.