tamilnadu

img

சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
யூடியூப் சேனலுக்கு சீமான் அளித்த பேட்டி ஒன்றில் நீதித்துறை பற்றியும், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுதொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், இரு குழுக்கள் அல்லது பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் பேசுதல், பொது தீமைக்கு வழி வகுக்கும் அறிக்கை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.