திருக்கோவிலூர், ஜூன், 12- சமூக விரோதிகளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை தியாகி அசோக்கின் முதலாம் ஆண்டு நினைவு நினைவு தினமான வெள்ளியன்று (ஜூன் 12) கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூ ரில் வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனையில் நடைபெற்ற முகாமிற்கு வட்டச் செயலாளர் எம்.எஸ்.கே ஹரி தலைமை தாங்கி னார். அசோக்கின் களப்பணிகள் குறித்தும், ரத்ததானத்தின் அவசியம் குறித்தும் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.செந்தில், மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, செய லாளர் வே.ஏழுமலை, துணைச் செயலாளர் மு.சிவக்குமார் ஆகியோர் பேசினர். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் ரம்யா, திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனை மருத்துவ அலுவலர் அலமேலு, ரத்த வங்கி மருத்துவர் ராஜவிநாயகம், வருவாய் வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். முன்னதாக அசோக்கின் உருவப்படத் திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜய குமார், சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.ராஜ வேலு, வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள் ஏ.ரமேஷ், கே.ஆறுமுகம், கே.செம் மலை, எம்.தீனா, எஸ்.பி.கண்ணன், எம்.திரு மலை, ஜி.தமிழரசன், எஸ்.மணிகண்டன், இ.பழனி, எம்.ஏழுமலை உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.