tamilnadu

img

அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக ஏ.ஆர் ரகுமான் ட்வீட்

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை அனைத்து மக்களும் ஏற்க வேண்டும் என்ற கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார். 
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டம், தில்லியில் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமித் ஷா கூறியதாக உள்துறை அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய பகுதியாக, ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் கருதக்கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதற்கு இந்திய பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக தமிழக முதல்வர்கள் இது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ழ'கரத்தைக் கொண்ட ஈட்டியை ஏந்திய பெண்ணுடன் 'தமிழணங்கு' என்று குறிப்பிட்டு பாரதிதாசனின் 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளையும் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.