மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘வன்முறையற்ற... போதையற்ற... தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற முழக்கத்தோடு 400 கிலோமீட்டர் நடைபயணத்தில் பங்கேற்வர்களுக்கு பாராட்டு விழா மாணவர், வாலிபர் மாதர் சங்கத்தின்திருவொற்றியூர் - எண்ணூர் பகுதிகள் சார்பில் சனிக்கிழமையன்று (டிச.15) விபிசி இல்லத்தில் நடைபெற்றது. வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாணவர் சங்க பகுதிச் செயலாளர் அகல்யா வரவேற்றார். மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுகந்தி, மாநில துணைச் செயலாளர் எஸ்.ராணி, மாவட்டச் செயலாளர் எஸ். பாக்கியம், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சரவணதமிழகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இசக்கி, புஷ்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.