சென்னை, ஆக. 9 - சென்னை மணலி கிடங்கில் இருந்த 740 டன் அமோனியம் நைட் ரேட் அகற்றப்படுகிறது. அதன் படி,10 கன்டெய்னர் மூலம் 200 டன் அம்மோனியம் நைட்ரேட் ஐத ராபாத் எடுத்துச் செல்லப்பட்டது. லெபனான் நாட்டின் பெய்ரூட் டில் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் வெடி விபத்தையடுத்து, மணலி சரக்கு கன்டெய்னர் முனை யத்தில் வைக்கப்பட்டு இருக்கும் அமோனியம் நைட்ரேட்டை அகற் றக்கோரி கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அங்கி ருந்து அப்புறப்படுத்த சுங்கத் துறைக்கு, மாசுகட்டுப்பாட்டு வாரி யம் பரிந்துரைத்தது. இதனை யடுத்து அமோனியம் நைட்ரேட் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் நிறுவனம் ஒன்று சுமார் 200 டன் அமோனியம் நைட்ரேட்டை ஏலம் எடுத்துள்ளது. அந்த நிறுவனம் முதற்கட்டமாக 10 கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்கிறது.