விழுப்புரம், டிச.16- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்குட் பட்டது மேல்அருங்குணம் கிராமம். இக்கிராமத்தில் வசிப்ப வர் கோபால் மகன் சுப்பிரமணியன். இவர் தலித் சமூ கத்தைச் சேர்ந்த குறு விவசாயி. இவருக்கு அதே கிரா மத்தில் பூர்வீக சொத்து 1 ஏக்கர் 81 செண்ட் நிலம் உள்ள தாகக் கூறப்படுகிறது. தந்தை மரணமடைந்துவிட்டதால் அந்த நிலத்தில் தற்போது வரை பயிர் செய்தும் வருகிறார். இந்நிலையில், பக்கத்து நிலத்து விவசாயியான மாற்று சமூகத்தைச் சேர்ந்த அதே கிராமத்தில் வசிக்கும் சரவணன் என்பவர் சுப்பிரமணியன் நிலத்தில் சர்வே எண்.45/2ஏ2 ல் 25 செண்ட் நிலத்தை தனது பட்டா நிலத்தோடு சேர்த்து கொண்டுள்ளார். இது குறித்து சாராட்சியர், மேல்மலையனூர் வட்டாட்சியர் ஆகியோரி டம் சுப்பிரமணியன் புகார் மனு கொடுத்து முறையிட்டும் அந்த நிலத்தை மீட்டு கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த சுப்பிரமணியன் அவரது சகோதிரிகள் தேவி, சின்னகுழந்தை ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்பேது, பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தாலுகா காவல்நிலைய காவ லர்கள் அவரை காப்பாற்றி விசாரணை செய்தனர்.