tamilnadu

img

விவசாயி தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை,மே 21-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயியை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.திருவண்ணாமலையை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (63), விவசாயி. இவர், திங்களன்று(மே20) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கவனித்த காவல்துறையினர் குழந்தைவேலுவை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அப்பேது, தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் 80 சென்ட் நிலத்தை என் மகள் பெயருக்கு எழுதி வைத்துள்ளேன். மீதியுள்ள நிலத்தை தன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று மகன் பவுன்குமார், தன்னை மிரட்டுவதாக தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்கொலைக்கு முயன்றேன் என்றார். இதையடுத்து, காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனிமேல் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது எனவும் காவல்துறையினர் குழந்தைவேலுவை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.