ஜுன் 11 - 20 தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சிப் பிரச்சாரம்
மக்கள் விரோத மோடி அரசை அம்பலப்படுத்த; மக்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் எடுத்துரைக்க கிளைகள் தோறும் களமிறங்குவீர் : சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் அழைப்பு
தமிழ்நாடு முழுவதும் 2025 ஜூன் மாதம் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 10 நாட்கள் நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நடைபயணம், இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. இந்த முடிவை அமலாக்குவதில் கட்சி அணிகளும், ஆதரவாளர்களும் முழுமையாக ஈடுபட்டு கிளர்ச்சி பிரச்சாரத்தை வெற்றிப் பெற செய்ய வேண்டுமென மாநிலக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பிரச்சாரம் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ‘தீக்கதிருக்கு’ சிறப்பு நேர்காணல் அளித்தார். அதன் முதல் பகுதி:
கேள்வி: ஜூன் 11-20 பிரச்சார இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்ன? பதில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சுயேச்சையான அரசியல் பிரச்சாரத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்சியின் அர சியல் செயல்பாடுகளைச் சுற்றி மக்களை அணி திரட்ட வேண்டும். தேர்தல் புரிந்துணர்வு அல்லது கூட்டணி என்ற பெயரில் நம்முடைய சுயேச்சையான அடையாளத்தையோ அல்லது நம்முடைய சுயேச்சையான நட வடிக்கைகளையோ குறைத்துக்கொள்ளக் கூடாது; ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா சக்தி களின் சித்தாந்தத்தையும், நடவடிக்கை களையும் எதிர்த்து தோற்கடிக்கக்கூடிய விதத்தில் நம் சித்தாந்தம் மற்றும் பிரச்சா ரத்திற்கு சிறப்புக் கவனம் கொடுக்க வேண்டும் என்பது கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம். அதன் அடிப்படையில், மக்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள், மக்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். குறிப் பிட்ட பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்ன என்பதை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிரச்சார இயக்கத்திற்கு திட்டமிட்டிருக்கிறோம். இந்த பிரச்சாரம் எவ்வாறு நடத்தப்படும்? இந்த பிரச்சாரப் பயணத்தின் வடிவம் என்பது, நடைப்பயணம், இரு சக்கர வாகனப் பிரச்சாரம் என்ற வகையில் மக்களை சந்திக்கும் பிரச்சாரமாக இருக்கும். இந்த 10 நாட்களில் கட்சியின் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பல லட்சக்கணக்கான மக்களை நேரடியாக சந்திக்க உள்ளனர். இது நிச்சயமாக ஒன்றிய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் தீவிர பிரச்சாரமாக அமையும். ஒன்றிய மோடி அரசுக்கு என்னென்ன கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்? ஒன்றிய அரசுக்கு நான்கு முக்கிய கோரிக்கைகள் உள்ளன: முதலாவது - விலைவாசி உயர்வுக் கட்டுப்பாடு: நாடு தழுவிய அளவில் அதி கரித்துக் கொண்டே செல்லும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக பெட்ரோல்-டீசல் விலையைக் குறைப்ப தன் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க முடியும். ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதன் மூலம் விலைவாசி உயர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இரண்டாவது - வேலையின்மை தீர்வு: நாடு தழுவிய அளவில் வேலையின்மையைப் போக்கும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் நிலையில், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும். மூன்றாவது - வக்பு வாரியச் சட்டத் திருத்தம் திரும்பப்பெறுதல்: வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு உட னடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டத் திருத்தம் இஸ்லாமிய மக்களின் சொத்துக்களையும் மத நிறுவனங்களின் சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கத்து டன் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. நான்காவது - அரசியலமைப்புப் பாதுகாப்பு: பசு பாதுகாப்பு என்ற பெயரில் பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கும் கிருத்துவ, இஸ்லாமிய மக்களுக்கும் எதிராக மதவெறி அமைப்பு குண்டர்கள் மூலம் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசி யலமைப்பு சாசனமும் அதன் விழுமியங்களும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்படும்? மாநில அரசுக்கு நான்கு முக்கிய கோரிக்கைகள் உள்ளன: முதலாவது - தேர்தல் வாக்குறுதிகள் நிறை வேற்றம்: மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப் படவில்லை. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்துவதால் மின் கட்டணம் பன்மடங்கு அதிகரித்து மக்களால் தாங்க முடியவில்லை. இரண்டாவது - வரி சுமைக் குறைப்பு: சொத்து வரி, குப்பை வரி போன்ற பல்வகையான வரி உயர்வு சுமைகளை மக்கள் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த வரி விதிப்பு களைக் குறைக்க அரசு முன்வர வேண்டும். மூன்றாவது - போலீஸ் கொள்கை மாற்றம்: ஜனநாயக உரிமைகளை மிதிப்பது, போராடும் உரிமைகளுக்கு அனுமதி மறுப்பது, எழுத்துரிமை மறுப்பது, காவல் நிலைய சித்திரவதைகள் என்பவை சட்ட விரோத மானவை. போலீஸ் கொள்கையில் மாற்றம் வேண்டும். நான்காவது - தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு: தொழிலாளர் உரிமைகளும் தொழிற்சங்க உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் இதற்குச் சிறந்த உதாரணம். சங்கப் பதிவு செய்வதற்கே நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்த பிரச்சார இயக்கத்தின் மூலம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? இந்த பிரச்சாரத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளும் நிலை பாடுகளும் மக்கள் மத்தியில் பரவலாகப் பரப்பப்படும். மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். கட்சியின் சுயேச்சையான அரசியல் அடையாளத்தை வலுப்படுத்த முடியும். ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா சக்தி களுக்கு எதிரான சித்தாந்த போராட்டத்தை தீவிரப்படுத்த முடியும். கட்சி ஊழியர்கள், ஆதரவாளர்களுக்கு என்ன அழைப்பு விடுக்கிறீர்கள்? பதில்: இந்த முடிவை அமலாக்குவதில் கட்சி அணிகளும், ஆதரவாளர்களும் முழுமை யாக ஈடுபட்டு கிளர்ச்சி பிரச்சாரத்தை வெற்றிப் பெற செய்ய வேண்டுமென மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. இந்த 10 நாட்களில் கட்சியின் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பல லட்சக்கணக்கான மக்களை நேரடி யாக சந்திக்க வேண்டும். இதன் மூலம் மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.