tamilnadu

img

நீதித்துறை சீர்திருத்தம் மெக்சிகோவில் நீதிபதிகளுக்கு வரலாறு காணாத தேர்தல்  

நீதித்துறை சீர்திருத்தம் மெக்சிகோவில் நீதிபதிகளுக்கு வரலாறு காணாத தேர்தல்   முதல் முறையாக மெக்சிகோவில் 2681 நீதிபதி களை தேர்வு செய்ய ஜூன் 1-ல் தேர்தல் நடை பெற்றது. 2024 செப்டம்பர் 11-ல் நீதிபதிகளை பொதுத்தேர்தல் மூலம் தேர்வு செய்யும் அரசிய லமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி லோபஸ் ஓப்ரடார் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் மையமான அம்சம் அனைத்து மட்டங்களிலும் உள்ள நீதிபதிகளுக்கான தேர்தல்  நடத்துவது. உச்ச நீதிமன்றத்தின் 9 உயர் நீதிபதிகள், 386 மாவட்ட நீதிபதிகள் உட்பட 2681 நீதிபதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்த வாக்காளர்களில் 13% பேர் மட்டுமே தேர்தலில் பங்கெடுத்தனர்.  1.3 கோடி பேர் வாக்களித்தனர்.  பழைய  காலத்தில் நீதித்துறையில் ஊழல்மலிந்து காணப்பட்டது. கிரிமினல்கள்  தண்டிக்கப்படவில்லை. பாதி நீதிபதிகள் சொந்த பந்தம் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். எனவே, இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றது. மனிதாபிமான நெருக்கடி உதவி தேடி வந்தவர்களை படுகொலை செய்த இஸ்ரேல்  அமெரிக்கா-இஸ்ரேலின் காசா மனிதாபிமான பவுண்டேஷன், ரஃபா நகர உதவி விநியோக மையத்தில் கூடிய, பட்டினியால் வாடும் பாலஸ்தீனி யர் கூட்டம் மீது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படைகள் ஜூன் 1-ல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தோர் அல்லது காயமுற்றோர் 220 பேர்.  இரும்பு வேலிகளான கூண்டு க்குள் பசியுடன் பாலஸ்தீனியர் தவித்த காட்சி, ஹிட்லர் ஆட்சியில் கிழக்கு ஐரோப்பாவில் யூதர்களை அடைத்து வைத்த சித்திரவதை முகாம் போல் இருந்தது.  அமெரிக்க நிலைப்பாடு: காசா போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற அமெரிக்க மூத்த அதிகாரிகள், ஜோ பைடன் நிர்வாகத்திலும் சரி, ட்ரம்ப்  நிர்வாகத்திலும் சரி, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகுவின் நலன்களுக்கே முன்னுரிமை அளித்தனர்.  பெண்கள் உரிமை அர்ஜென்டினாவில் பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் 10ஆம் ஆண்டு  “நி யுனா மெனோஸ் (Not one woman less)” என்ற பெண்கள் பாதுகாப்பு இயக்கம் 2015 ஜூன் 3-ல் நிறுவப்பட்டது. 14 வயது சிறுமி சியாரா பையாஸ் கொல்லப்பட்டதை கண்டித்து உருவான இந்த இயக்கம், கடந்த 10 ஆண்டுகளில் விரிவடைந்துள்ளது.  பொலிவியா, சிலி, எல் சால்வடார், கௌதமாலா, பராகுவே, பெரு மற்றும் உருகுவே உள்ளிட்ட பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இந்த இயக்கம் பரவியுள்ளது.  இந்த ஆண்டு ஜூன் 3 பேரணியில் ஓய்வூதியதாரர், மாற்றுத்திறனாளிகள், புலம்பெயர்ந்தோர், சுகாதார ஊழியர்கள் அர்ஜென்டினா மக்கள் மீதான ஜேவியர் மிலே வலதுசாரி அரசின் தாக்குதல்களுக்கு எதிராக பெரும் திரளாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.  புவி-அரசியல் மாற்றம் தென் ஆப்பிரிக்கா- அமெரிக்கா வணிக ஒப்பந்தம்  மே 21-ல் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்தபோது தென்னாப்பிரிக்கா-அமெரிக்கா வணிக ஒப்பந்தம் ஏற்பட்டது.  ஒப்பந்த விவரங்கள: - அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமெரிக்காவிலிருந்து திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை தென் ஆப்ரிக்கா இறக்குமதி செய்யும். - 40,000 வாகனங்கள், 38.5 கோடி கிலோ ஸ்டீல், 13.2 கோடி கிலோ அலுமினியம் காப்பு வரிகள் இன்றி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி. விமர்சனம்: முன்னாள் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சேர்மன் ஷீபோ கதிமா, இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானதும் இல்லை; லாபகரமானதும் இல்லை என்றார்.  ஆப்பிரிக்க ஒற்றுமை 62ஆவது ஆப்பிரிக்க விடுதலை தினம்  மே 25 ஆப்பிரிக்க தினமாக கொண்டாடப் பட்டது. 1963ல் ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு உருவாக்கப்பட்ட நாள். 120 கோடி மக்கள் 54 நாடுகளில் வசிக்கின்றனர். கானா சோசலிஸ்ட் இயக்கத்தின் அறிக்கை: “அரசியல் விடுதலைக்கு 62 ஆண்டுக்குப் பிறகு, ஆப்பிரிக்காவில் விடுதலை முழுமை பெறவில்லை. நவீன காலனி ஆதிக்கம், கடன் வலை, பொருளாதார சார்பு, அந்நிய ராணுவ ஆக்கிரமிப்புகள் பின் தொடர்கிறது.”  கோரிக்கைகள் - அனைத்து ஏகாதிபத்திய படைகளும் ராணுவ முகாம்களும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.  - பாலஸ்தீன இனப்படுகொலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  - மேற்கு சஹாரா, ஸ்வாஜிலாந்து ஆகிய நாடுகளின் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். ஐரோப்பிய அரசியல் சிக்கன சீரமைப்பிற்கு எதிராக இடதுசாரிகளின் ஒற்றுமை அவசியம்  ஜூன் 24-26ல் நேட்டோ ராணுவக் கூட்டணியின் உச்சி மாநாடு ஹேக் நகரில் நடைபெறுகிறது. நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ருட்டே, 2032-க்குள் நேட்டோ நாடுகள் ஜிடிபி-யில்  3.5% ராணுவத்திற்காக செலவு செய்ய வேண்டும் என்றார்.  2007 முதல் 2024 வரை ஐரோப்பிய நாடுகளின் சராசரி தனிநபர் ஆண்டு ஜிடிபி வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதத்திற்குள் தான் உள்ளது.  ஐரோப்பிய இடதுசாரி, முற்போக்கு கட்சிகள் மக்கள் நலனுக்காக, தேச நலனுக்காக நேட்டோ ராணுவ மயமாக்கல் மற்றும்  சிக்கன சீரமைப்பு கொள்கைகளுக்கு எதிராக, மக்களை  பெருமளவில் அணி திரட்டி சக்திமிக்க போராட்டங் களை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  சுகாதார ராஜதந்திரம் உலக சுகாதார பேரவையில் பாலஸ்தீன ஆதரவு  78வது உலக சுகாதார பேரவை மே 19-27ல் ஜெனிவாவில் நடைபெற்றது. பல தெற்குலக நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அறிக்கைகளை சமர்ப்பித்தன. பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான ஆதரவு பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற தீர்மானம் 104 நாடுகள் ஆதரவாகவும், 4 நாடுகள் எதிராகவும் வாக்களித்து நிறைவேற்றப்பட்டது.  அழிவின் அளவு: 130 கோடி டாலர் பெருமான மருத்துவ உட்கட்டமைப்பு காசாவில் அழிக்கப்பட்டு விட்டது. 20 லட்சம் பேருக்கு மன ரீதியான ஆதரவு தேவை.