எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’கிற்கு அனுமதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு
புதுதில்லி, ஜூன் 8- உலகின் முதல் மாபெரும் பணக் காரர்களில் ஒருவரும் பெரும் கார்ப்பரேட் கொள்ளையனுமான எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை நிறுவனம் இந்தி யாவிற்குள் தன் செயல்பாடுகளைத் தொடங்க இந்திய அரசு அனு மதித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தன் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்க இந்திய அரசு அனுமதி அளித்திருப்ப தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. ஸ்டார்லிங்க் நமது நாட்டில் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட விதத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஸ்டார்லிங்க் ஒரு வெளி நாட்டு நிறுவனம். இந்தியாவின் முக்கி யமான உள்கட்டமைப்பை வெளி நாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப் பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திடும். ஸ்டார்லிங்க்கிற்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் நம் தொலைத் தொடர்பு அமைப்பில் நுழையவும், முக்கியமான தக வல் தொடர்புகளை தெரிந்து கொள்வதற்கும் பின்புறக் கதவு திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஸ்டார்லிங்க்கிற்கு ஒருமுறை ஒதுக்கப்பட்ட செயற்கைக்கோள் இட ங்களின் எண்ணிக்கை, குறிப்பாக தாழ்வான பூமி சுற்றுப்பாதை இடங்களை திரும்பப் பெற முடியாது. இது நமது பற்றாக்குறையான விண்வெளி வளங்களை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விட்டு க்கொடுப்பதோடு, நம் நாட்டின் நலன் களையும் தியாகம் செய்வதாகும். இந்தியாவின் சொந்த திறன் நமது நாட்டின் தன்னம்பிக்கைத் திறன்களை வளர்ப்பதில் அரசாங்கம் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால், நமது சொந்த இஸ்ரோ வின் சேவைகளைப் பயன்படுத்தி யிருக்கலாம். இந்தியா, குறிப்பாக தொலைத் தொடர்புத் துறை, சி-டாட் (C-DOT) எனப்படும் தகவல் தொலைத் தொடர்பு மேம்பாட்டிற்கான மையம் ஆகியவை செயற்கைக் கோள் தொடர்பு (SATCOM) துறைக்குத் தேவையான உபகர ணங்களை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கை கள் இந்திய பொதுத்துறையை வலுப்படுத்தியிருக்கும். மேலும் நமது பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் இறையாண்மையையும் பாது காத்திருக்கும். மர்மமான உடன்பாடு இந்த ஒப்பந்தம் முழுவதும் மர்ம மாக உள்ளது. இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்களில் 4 சதவீதத்தை மட்டுமே வசூலிப்பதாகவும், எந்த முன்கூட்டிய கட்டணங்களையும் வசூலிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நமது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதுடன், நம் நாட்டின் நலன்களுக்கும் தீங்கு விளை விப்பதாகும். இந்திய விண்வெளி ஒழுங்கு முறை அமைப்பின் அனுமதியின் நிலை மற்றும் விவரங்கள் கூட இன்னும் பொதுமக்களுக்கு வெளி யிடப்படவில்லை. பிஎஸ்என்எல்-ஐ முற்றாக ஒழிக்கும் முயற்சி ஸ்டார்லிங்க்கின் நுழைவு மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மிட்டலின் பாரதி ஏர்டெல் உடனான அதன் கூட்டாண்மை ஒரு ‘மெய்நிகர் இரட்டை ஆட்சியை’ உருவாக்கப் போகிறது; இது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் போட்டியிடுவதை மிகவும் கடினமாக்கும். இது நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் மலிவான தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகளை வழங்கும் பிஎஸ்என் எல்-ஐ முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் மற்றொரு முயற்சியேயாகும். ஸ்டார்லிங்க்கின் செயல்பாடு களை அனுமதிப்பது நீண்ட காலத்திற்கு நாட்டின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். அரசாங்கம் தனது முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)