வாக்காளர் பட்டியல் மோசடி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, ஆக. 28 - சென்னை கோடம்பாக்க த்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட சிவக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள் ளார். அந்த மனுவில், “கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற 17-வது மக்களவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள், ஒரே முகவரி யில் அதிக எண்ணிக்கையில் வாக் காளர்கள் என மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகை யில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலை யிட்டு தீர்வு காண வேண்டும். அந்த அடிப்படையில் அனைத்து தொகுதிகளுக்குமான வாக்கா ளர் பட்டியல் தரவுகளை, பொது மக்கள் பார்வைக்கு இணை யத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப் பட்ட நடவடிக்கைகள், விசார ணைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தி ற்கு உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.