பல வகைகளிலும் தமிழ்நாட்டிற்கு பாஜக துரோகம் கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை
சென்னை, ஜூலை 5- இந்தி திணிப்புக்கு எதிராக, மகாராஷ்டிரா தலைநகர் மும்பை யில் நடைபெற்றுள்ள பேரணியைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதா வது: இந்தித் திணிப்பை முறியடிக்க திமுக-வும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து, இப்போது மராட்டியத்தில் போரா ட்டச் சூறாவளியாகச் சுழன்ற டித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி யைக் கற்பித்தால்தான், நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரத்தில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண் டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே தலை மையில், மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணி யின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. “உத்தரப்பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?” என்றும், “இந்தி பேசும் மாநிலங்கள் பின் தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்க ளின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?” என்றும் ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரி மையாக வைத்திருக்கிற பாஜக அர சிடம் எந்த பதிலும் இருக்காது என் பதை நன்றாக அறிவேன். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிரு தத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை பாஜக அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தை களின் கல்விக்காகச் சட்டப்பூர்வ மாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா? இந்தி ஆதிக் கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக் கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வ மானது! இந்தியாவின் பன்மைக் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கா னது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல! இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வர லாற்றை அறியாமலும், இந்தியா வை இந்தி நாடாக்கும் செயல் திட்டத்தைப் புரிந்துகொள்ளாம லும், “இந்தி படித்தால் வேலை கிடைக்கும்” என்ற வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப்போல ஒப் பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள சிலர், இனியாவது திருந்த வேண் டும். மராட்டியத்தின் எழுச்சி அவர் களின் அறிவுக் கண்களைத் திறக் கும்! தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்து வரும் துரோகத்துக்கு பாஜக பரி காரம் தேட வேண்டும். இல்லை யேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ் நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும். இவ்வாறு முதலமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.