கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள வ.உ.சி. படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, மதிவேந்தன், மேயர் பிரியா ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.