போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
விருதுநகர், அக்.,10 பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர தொடர்ந்து 54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விருதுநகர் பணிமனை முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு முனீஸ்வரன் தலைமையேற்றார். துவக்கி வைத்து சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.அசோ கன் பேசினார். கோரிக்கைகளை விளக்கி நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜி. வேலுச்சாமி, மோகன்ராஜ், கருப்பசாமி, பாலசுப்பு, காத்தமுத்து, ரவிச்சந்திரன் ஆகி யோர் பேசினர். நல அமைப்பின் மாவட்ட செயலாளர் போஸ் நிறைவுரையாற்றினார்.
