தலித் மக்கள் - பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நீண்ட காலமாக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அமலாகி வருகிறது. நாடாளு மன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்த லில் தலித் - பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு அமலாகிறது. இந்த இட ஒதுக்கீடு களை கம்யூனிஸ்ட் இயக்கம் முழுமையாக ஆதரிக்கிறது. இவை சரியாகவும், உறுதி யான முறையிலும் அமல்படுத்தப்படாத போது இடஒதுக்கீடுகளை நேர்த்தியாக அமல்படுத்தும்படி கோரி போராடவும் செய்கிறது. இந்த இட ஒதுக்கீடுகள் தலித் - பழங்குடி - பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றத்தை ஓரளவு ஏற்படுத்தியுள்ளன என்பதில் ஐயமில்லை. ஆயினும், ஒரு அம்சத்தை எவரும் மறுக்க முடியாது. இந்த இடஒதுக்கீடுகள் கோடிக்கணக்கான தலித் - பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்நிலையில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வில்லை. ஆம்! இட ஒதுக்கீடு ஒரு நிவாரணி தான். ஆனால், அதுவே சர்வரோக நிவாரணி அல்ல. இந்த கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீட்டிற்கும் இன்றைய தனியார்மய, தாராளமய கொள்கைகளால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மறுபுறம் சாதிய உணர்வுகள், பணபலத்தின் காரணமாக தலித் மக்களுக்கான தேர்தல் இட ஒதுக்கீட் டிற்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆம், தலித் மக்களின் உண்மையான நலன்களை பிரதிபலிப்பவர்கள் தேர்வு செய்யப்படு வதற்கு பதிலாக ஆளும் வர்க்கத்தின் எடு பிடிகள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் விவசாயப் புரட்சி நடை பெற்று கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களுக்கு நிலம் கிடைத்தால் ஒழிய - அதாவது, இம்மக்கள் தங்கள் அன்றாட வாழ்விற்கு ஆளும் வர்க்கங்கள் - சாதி இந்துக்களை சார்ந்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் ஒழிய - இவர்க ளின் முழு சமூக விடுதலை சாத்தியமல்ல. ஆம். சமூக விடுதலையும், பொருளாதார விடுதலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது தான். இந்த இரண்டிற்குமான விடுதலைக்காக கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்க ளின் சமூக உரிமைகளுக்காக போராடும் போது ஆளும் வர்க்கங்களும், சாதி இந்துக்க ளும் இவர்களுக்கு வேலை தர மறுத்தும், சமூக பகிஷ்காரம் செய்தும் இவர்களை பணிய வைக்க முயற்சிப்பதை ஏராளமான அனுபவங்கள் உணர்த்துகின்றன. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் நிலச் சீர்திருத்தம் அமலாகி லட்சக்கணக்கான அடித்தட்டு மக்களாகிய விவசாயத் தொழி லாளர்களுக்கு நிலம் வழங்கப்பட்டதால் - அதாவது, இவர்களின் அன்றாட வாழ்விற்கு ஆளும் வர்க்கங்களையோ, சாதி இந்துக் களையோ சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாததால் தங்களது சமூக உரிமைகளை பெரும்பாலும் நிலைநாட்டி உள்ளனர். தீண்டாமை உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறை களிலிருந்து தலித் மக்கள் கணிசமாக விடு விக்கப்பட்டுள்ளனர். இது நாம் தெரிவிக்கும் கணக்கு அல்ல. தேசிய மனித உரிமை ஆணையம் வெளிப்படுத்தும் உண்மை. ஆயினும், தமிழ்நாடு உள்பட பல மாநி லங்களில் இத்தகைய நிலை இல்லாததால் அடித்தட்டு மக்கள் தங்கள் சமூக உரிமை களையும், ஜனநாயக உரிமைகளையும் நிலைநாட்ட முயலும் போது வேலை தர மறுப்பது - சமூக பகிஷ்காரம் செய்வது உள்ளிட்ட ஒடுக்குமுறைகளை எதிர் கொள்கின்றனர். இந்நிலையைத்தான் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலின் போது 10 ஆண்டுகளாக தலித் மக்கள் எதிர் கொண்டனர். இந்த ஊராட்சிகள் சட்டப்படி தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சி களாகும். இவை தலித் மக்களுக்கு ஒதுக்கப் பட்டதை சாதிய சக்திகள் ஏற்றுக்கொள்ள வில்லை. இந்த ஊராட்சிகளை சாதி இந்துக் களுக்கு ஒதுக்க வேண்டுமென வலியு றுத்தின. இக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படாத போது - இவ்வூராட்சிகளில் முறையாக தேர்தல் நடத்தும்படி தலித் மக்கள் வலி யுறுத்தி போராடிய போது சாதிய சக்திகளின் தூண்டுதல் பேரில் அவர்களுக்கு சாதி இந்துக்கள் தங்கள் நிலங்களில் வேலை தர மறுத்தும், சமூக பகிஷ்காரம் செய்தும் பழிவாங்கினர். இவ்வாறு, தலித் மக்கள் சமூக பகிஷ் காரம் மூலம் பழிவாங்கப்பட்ட போது அதை கைவிட வலியுறுத்தியும் மேற்கண்ட ஊராட்சிகளில் முறையாக தேர்தல் நடத்த கோரியும் சிபிஐ(எம்) போராடியது. 9.5.2005இல் உசிலம்பட்டியில் ஜே.ஹேமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்பிரச்சனைக்காக வேறு எந்த இயக்கமோ, கட்சியோ கண்டன போராட்டம் நடத்தாத போது சிபிஐ (எம்) நடத்தியதும், அதில் 800 பேர் வரை கலந்து கொண்டதும் அச்சந்தர்ப்பத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இருந்தது. அதுவும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சியில் தேர்தல் நடத்தக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கணிசமான சாதி இந்துக்களும் பங்கெடுத்து கொண்டதானது ஒரு வித்தியாசமான நிகழ்வாக அப்பகுதியில் பார்க்கப்பட்டது. செங்கொடி இயக்கத்தால் மட்டுமே இத்தகைய சாதனை சாத்தியமாகும். மேற்கண்ட 4 ஊராட்சிகளிலும் 10 ஆண்டுகளாக முறையாக தேர்தல் நடத்தவில்லை. அரசு சிலமுறை தேர்தல் நடத்த முயற்சி செய்த போது தலித் மக்களை வேட்புமனுத்தாக்கல் செய்ய விடாமல் சாதிய சக்திகள் தடுத்தனர். மீறி தாக்கல் செய்தபோது அவர்களை தலித் அல்லாத மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவில்லை - சாதி இந்துக்கள் தேர்தலை புறக்கணிக்கவும் செய்தனர் - வாக்குச் சாவடிக்கு வந்த தலித் மக்களை மிரட்டினர் - தேர்தலுக்கு பிறகும் சாதி இந்துக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர் - தேர்வு செய்யப்பட்ட தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தனர் - அவர்களை கண்டுகொள்ளவில்லை - சில சமயம் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு தலித் பஞ்சாயத்து தலைவர்களை அவமானப்படுத்தினர். 2001 அக்டோபர் மாதம் தேர்தலை நடத்த தமிழக அரசு முயன்ற போது 4 ஊராட்சிகளில் தேர்தல் நடைபெறவிடாமல் சாதிய சக்திகள் தடுத்து விட்டனர். யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியவில்லை. இப்பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்துவது என்பது பதற்றமானதாக வும், வன்முறைச் சம்பவங்களை எற்படுத்துவதாகவும் இருந்தது. பிறகு, 2002 ஏப்ரல் 8ல் தேர்தல் நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக சுப்பனும் (பாப்பாபட்டி), பூங்கொடியும் (கீரிப்பட்டி) ஒருவாறு வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதையறிந்ததும் சாதிய சக்திகள் தூண்டுதல் பேரிலும், சாதி இந்துக்கள் ஆதரவோடும் பாப்பாபட்டியில் தனிக்கொடியும், கீரிப்பட்டியில் கருத்தக்கண்ணணும் போட்டி மனுக்களை தாக்கல் செய்தனர். இவ்வாறு போட்டி உருவாகிய நிலையில், கணிசமான தலித் மக்கள் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என எதிர்பார்த்து ஊரையே காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டனர். சுப்பன், பூங்கொடி ஆகிய இரு வேட்பாளர்களுமே வலுவான காவல்துறை பாதுகாப்புடன் இருந்தபோதும் தலித் மக்கள் அல்லாத இதர பகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய முடியவில்லை. தேர்தல் நாளன்று தலித் மக்களை சாதிய சக்திகள் மிரட்டியதால் அவர்கள் கணிசமாக வாக்களிக்கவில்லை. இந்நிலையில், சாதி இந்துக்களின் வாக்குகளை பெற்ற தனிக் கொடியும் (பாப்பாபட்டி), கருத்தக் கண்ணணும் (கீரிப்பட்டி) வெற்றி பெற்றனர். ஆனால், என்ன விபரீதம்? பதவியேற்ற மறு விநாடியே கருத்தக் கண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற இரண்டு நாட்களில் தனிக்கொடி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த இருவருமே தங்கள் சொந்த விருப்பப்படி ராஜினாமா செய்ததாக வெளியே சொல்லிக் கொண்டாலும், இந்த தலித் பஞ்சாயத்துக்கள் செயல்படாமல் வைத்திருப்பதற்காகவே சாதிய சக்திகள் செய்த ஏற்பாடு இது என்பதில் ஐயமில்லை. தனிக்கொடியும், கருத்தக்கண்ணணும் ஊராட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ததையும் அப்பிரச்சனையை அப்போதைய தமிழக அஇஅதிமுக அரசு கையாண்ட வழிமுறைகளை யும் ஜனநாயக இயக்கங்கள் - சில அரசியல் கட்சிகள் - மனித உரிமை அமைப்புகள் கண்டனம் செய்தன. தலித் மக்களுக்கு முழு பாதுகாப்பு அளித்து மீண்டும் தேர்தலை உறுதியான முறையில் நடத்த வேண்டுமென சிபிஐ(எம்) வலியுறுத்தியது. தமிழக சமூகத்தில் சாதிய முன்முடிவுகள் எவ்வாறு வலுவாக உள்ளன என்பதை இந்த ராஜினாமாக்கள் எடுத்துக்காட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பஞ்சாயத்து ராஜ் ஆய்வுகளின் மையமான ராஜீவ்காந்தி மையத்தின் தலைவர் க.பழனித்துரை சமூகத்தில் மூத்த மக்களின் உதவியை பெற்று முன்னதாக நடவடிக்கை எடுத்து பிரச்சனை களை தீர்த்து தேர்தல் நடத்தியிருக்க வேண்டும் என கூறினார். மேலும் “கேரளா, மேற்கு வங்கத்தில் உள்ளதைப் போல கட்சி அடிப்படையிலான தேர்தல்களை ஊராட்சிகளுக்கு நடத்தலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.
குடிமை உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி தலைவர் ரவிக்குமாரும், “பஞ்சாயத்து தேர்தலை கட்சிகளின் அடிப்படையில் நடத்துவதுதான் நீண்ட கால அடிப்படையில் நல்லது” என்றார். வேறு பல அரசியல் கட்சிகள் இப்பிரச்சனையில் வாய்திறக்கவில்லை. 2006ல் அஇஅதிமுக தோல்வி அடைந்து கலைஞர் தலைமையில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. சிபிஐ(எம்) தரப்பில் இப்பிரச்சனையில் வலுவான இயக்கங்களுக்கு திட்டமிடப்பட்டது. நன்மாறன் தலைமையிலான குழுவினர் நான்கு ஊராட்சிகளுக்கும் சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து வந்தார்கள். பிறகு 10 ஆண்டுகளாக 4 ஊராட்சிகளிலும் முறையாக தேர்தல் நடைபெறவோ, ஊராட்சிகள் செயல்படவோ இல்லாததால் இந்த ஊராட்சிகளுக்கு 10 ஆண்டு கால சுழற்சி என்பதை அமல்படுத்தக் கூடாது என்பதையும் தலித் மக்களின் பிரதிநிதிகளுக்கு இந்த ஊராட்சிகள் ஒதுக்கப்பட வேண்டுமென்பதையும் முன்னிறுத்தி சிபிஐ(எம்) சார்பாக அதன் மாநில செயலாளர் என்.வரதராஜன் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அன்றைய கலைஞர் தலைமையிலான திமுக அரசு உடனடியாக இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இக்காலத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம் சிறப்பான ஒரு பிரச்சார இயக்கத்திற்கு திட்டமிட்டது. 4 ஊராட்சிகளிலும், அனைத்து பிரிவு மக்களிடமும் இதன் தலைவர்கள் ஒரு வேனில் சென்று தெருமுனைப் பிரச்சார கூட்டங்களை பல்வேறு முனைகளில் நடத்தினர். இந்த நான்கு ஊராட்சிகளும் தலித் பிரதிநிதிகளுக்கே ஒதுக்கப்பட வேண்டும் - அரசியல் சட்டப்பூர்வமான இந்நிலைபாட்டிற்கு அனைத்து பிரிவு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் - உள்ளாட்சி தேர்தல் அமைதியாக வும், நேர்மையாகவும் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என இப்பிரச்சாரத்தின் போது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழகத்தில் மாறியிருந்த அரசியல் சூழ்நிலையில் தமுஎகச-வின் இந்த பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த நான்கு ஊராட்சிகளுக்குமான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு தேர்தல் நேர்மையாக நடைபெற உறுதியான முயற்சிகளை மேற்கொண்டது. மாவட்ட ஆட்சித் தலைவராக திரு உதயச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு அன்பு, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக திரு பொன்ராஜ் ஆலிபர் ஆகியோர் செயல்பட்டு நான்கு ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தேர்தலை திறம்பட நடத்தி முடித்தனர். இத்தேர்தலில் பாப்பாபட்டி ஊராட்சி தலைவராக பெரியகருப்பன், கீரிப்பட்டி ஊராட்சி தலைவராக பால்சாமி, நாட்டார்மங்கலம் ஊராட்சி தலைவராக கணேசன் தேர்வு செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் கொட்டக்கச்சியேந்தல் ஊராட்சி தலைவராக கருப்பன் தேர்வு செய்யப்பட்டார். இவர்களில் கீரிப்பட்டி ஊராட்சி தலைவர் பால்சாமி சிபிஐ(எம்) கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம் 10 ஆண்டு களுக்கு மேலாக நீடித்த பிரச்சனை - நெருக்கடிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நான்கு ஊராட்சிகளும் தற்போதும் தலித் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளாகவே நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக வரலாற்றில் பெரும் சவாலாக இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு முறையாக தேர்தல் நடத்த செய்வதில் சிபிஐ(எம்) வகித்த பாத்திரம் குறிப்பிடத்தக்கதாகும். இதேபோல, இத்தேர்தலை அன்றைய கலைஞர் தலைமையிலான திமுக அரசு ஒரு அரசியல் உறுதியுடன் வெற்றிகரமாக நடத்தியது என்பதும் முக்கியமான அம்சமாகும். தமிழக அரசியல் வரலாற்றில் இந்த நான்கு ஊராட்சி களுக்கான உள்ளாட்சி தேர்தல் முக்கிய நிகழ்வாக இடம் பெறும்.