tamilnadu

தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்

சென்னை, ஜூன் 4 - தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர்  உரிமைத் தொகை திட்டம்’ மூலம் மாநி லம் முழுவதும் 1.14 கோடி பயனாளி களுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ. 1,000 செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர, 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. எனவே, தகு தியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று  கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமை ச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும் பெண்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத் திற்குள் அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தர விட்டிருந்தார். அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட வர்கள், ஜூன் 5 முதல் விண்ணப்பிக்க லாம் என்று தமிழக அரசு தெரி வித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முழு வதும் 9,000 இடங்களில் புதிதாக இணை பவர்களுக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் புதனன்று துவங்கின. இதில் அதிகபட்சம் 15 லட்சம் பேர் வரை புதிதாக சேரக்கூடும் என்று கூறப் படுகிறது. முகாமில் கொடுக்கப் படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கப்படும். தேவையான ஆவணங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் கொண்டு செல்ல வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மொபைல் போனையும் கொண்டு  செல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தகுதி நிபந்தனைகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.5  லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்கள், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். விண்ணப்பங்களை அரசு அலுவலர்கள் ஆராய்ந்து விண்ணப்ப தாரர்கள் பயனாளர்களாக இணைய தகுதி படைத்தவர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். திட்டத்தில் பயனா ளர்களாக இணைக்கப்பட்டாலும் அல்லது நிராகரிக்கப்பட்டாலும் விண்ணப்பதாரர்களின் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.