விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண் டும். கௌரவமான வேலை வழங்க வேண்டும். பொதுத் துறைகள் மற்றும் தொழிலா ளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழு முனைகளில் இருந்து திருச்சி நோக்கி சிஐ டியு நடைபயணம் மேற் கொண்டுள்ளது. இந்த நடை பயணத்தில் 150-க்கும் மேற் பட்ட இன்சூரன்ஸ் ஊழியர் கள் கோயம்புத்தூர், தென் காசி, கடலூரில் இணைந்து நடந்து வருகிறார்கள். அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், தென்காசியில் க.சுவாமிநாதன், சி. முத்துக் குமாரசாமி, பொன்னையா, மதுபால், கோயம்புத்தூரில் வி.சுரேஷ், குமார், துளசி தரன், சுவாமிநாதன், கடலூ ரில் ஜெயஶ்ரீ உள்ளிட்டவர் கள் நடைபயணத்தின் முதல் நாளில் பங்கேற்றனர்.