நாகர்கோவில், ஜூன் 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு ஜூன் 25-ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) மாலை கன்னியா குமரி மாவட்டம் தக்கலையில் நடை பெறுகிறது. இம்மாநாட்டை நடத்து வதற்கான வரவேற்புக்குழு அமைப் புக் கூட்டம் தக்கலையில் நடைபெற் றது. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலை வராக ஏ.வி. பெல்லார்மின், செயலா ளராக சுஜா ஜாஸ்மின், பொருளாள ராக கே.மாதவன் ஆகியோர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் நோக்கம்
பல்வேறு துறைகளில் பெண்கள் முத்திரை பதிக்கிறார்கள். முன்னேறி வருகிறார்கள். சமூகச் சூழல் உகந்த தாக இருந்தால் இந்த முன்னேற்றம் பல மடங்கு அதிகம் இருக்கும். ஆனால், பல்வேறு காரணிகள் பெண் ணின் உரிமைக்கும் முன்னேற்றத் திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளது. தமிழகத்தில் பெண்கள் குழந்தை கள் மீதான வன்முறை அதிகரித்துள் ளது. சாதி ஆணவக் குற்றங்களும் கொலைகளும் அதிர்ச்சியூட்டும் வடிவத்தில் நடக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவிகள் மீதான பாலியல் தொல்லை பெருமளவு அதிகரித்துள் ளது. பணியிடங்களில் பாலியல் தொந் தரவு முக்கியப் பிரச்சனையாக முன் னுக்கு வருகிறது. குடும்ப வன்முறை, காதலிக்க மறுத்தால் கொலை போன்ற சம்பவங்களும் நிகழ்கிறது. குழந்தைகளும் கூட பாலியல் வல்லு றவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் கும்பல் பாலியல் வல்லுறவும் நடை பெறுகிறது. மதுபான விற்பனையும் போதைப்பொருள் விற்பனையும் அதிகரிப்பது குற்றங்கள் நடக்க உகந்த சூழலை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில் பெண்ணு ரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.