tamilnadu

img

இந்தியாவில் முதன் முதலாக மெரினா கடற்கரையில் மேதின செங்கொடியை சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர்

இந்தியாவில் முதன் முதலாக மெரினா கடற்கரையில் மேதின செங்கொடியை சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் ஏற்றினார். இந்நிகழ்வின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மேதின கொடியேற்று விழா திங்களன்று (மே 1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 62வது வட்டக் கிளைகள்  சார்பில்  சிந்தாதரிப்பேட்டையில்  நடைபெற்றது.  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  வெண்மணி தியாகிகள் நினைவு கல்வெட்டை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.  மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, வே.ஆறுமுகம், பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.கபாலி, கிளைச் செயலாளர்கள் நா.சுரேஷ்குமார், குணசீலன் உள்ளிட்டோர் பேசினர்.