சென்னை, மே 27 - பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசால் செயல்படுத்த முடியும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில செயல் தலைவர் எம்.துரைப்பாண்டியன் கூறினார். தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை அனைத்து ஓய்வூதியர் சங்க த்தின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை (மே 27) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து எம்.துரைப்பாண்டியன் பேசு கையில், “மாநிலத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் 55 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்து வைத்துள்ளனர். பணம் இல்லை என்பது பிரச்சனை யல்ல. எனவே, மாநில அரசால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியும். ஓய்வு தியத்திற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் ஒன்று பட்டு போராட வேண்டும்” என்றார். “அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராடுகிற போதெல்லாம் ஆட்சி மாற்றம் நிகழ்கிறது. எனவே, போரா ட்டத்தை அரசு தூண்டக் கூடாது” என்று குறிப்பிட்ட அவர், “8ஆவது ஊதியக்குழுவை அமைக்க வலி யுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் போராட்டத்தை தொடங்க உள்ளோம். ஓய்வூதிய பிரச்சனைக் காக ஒன்றிய, மாநில அரசு ஊழி யர்கள் இணைந்து போராட்டம் நடத்த வும் திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.
இந்த மாநாட்டில், புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்த வேண்டும், ஒன்றிய அரசு அகவிலைப்படி வழங்கும் அதே தேதியில் மாநில அரசும் வேறுபாடின்றி வழங்க வேண்டும், கம்யூடேசன் தொகை பிடித்தம் செய்யும் காலத்தை 15லிருந்து 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும், 70 வயது நிறைவுற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதலாக 10 விழுக்காடு ஓய்வூதியம் தர வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை பிற மாநிலங்களைப் போன்றே தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும். மாதந்தோறும் வழங்கப்படும் மருத்துவப்படியை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில அமைப்பாளர் பொன்.வேலு தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் எஸ்.ஏ.வெற்றிராஜன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை ஆ.து.ஜெயகோபி வாசித்தார். மாநாட்டு சிறப்பு மலரை, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் வெளியிட்டார். மாநில அமைப்பாளர் பொன்.வேலு வேலை அறிக்கையும், நிதிக் காப்பாளர் ஆர்.வி.பாலகிருஷ்ணன் நிதிநிலை அறிக்கையும், சங்க விதி கள் திருத்த அறிக்கையை டி.பால கிருஷ்ணனும் சமர்ப்பித்தனர். தோழமை சங்கத் தலைவர்கள் வாழ்த்தி பேசினர். மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு பேசினார். ஆர்.ராஜகோபால் நன்றி கூறினார்.