சென்னை, டிச. 24- மதவாத சக்திகளை வீழ்த்த பெரியாரின் கொள்கைகளை மேலும் முன்னெடுக்க அவரது நினைவு நாளில் உறுதியேற்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தந்தை பெரியாரின் 48ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தலைமையில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, பி.டில்லி பாபு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: மூட பழக்க வழக்கங்களில் இருந்து, வர் ணாஸ்ரம தர்ம சாதிய கொடுமைகளில் இருந்து தமிழக சமுதாயத்தை தட்டி எழுப்பி பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பி, சாதி, மத வேறுபாடுகள் இல்லாத கொள்கைக்கு உயி ரூட்டிய தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமையடைகிறது. இந்தியாவில் தற்போ தும் மதவெறி சக்திகள் ஆட்சியில் இருந்து கொண்டு சாதிய, சனாதன, பிற்போக்கு பழக்க வழக்கங்களை, பெண் அடிமைத் தனத்தை மீண்டும் உயிரூட்டும் முயற்சியை ஆர்.எஸ்.எஸ். தலைமை வழிகாட்டுகிற பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழ்நி லையில் பெரியாரின் கருத்துக்கள் வலு வடைய வேண்டியுள்ளது.
இந்திய சமூகம், சாதிகளாலும், மதங்களா லும், பிரிந்து கிடக்கின்ற காரணத்தினால் மக்கள் ஒற்றுமை சீர்குலைந்து, மனித சமூகம் தனது அன்றாட வாழ்விற்கே அவதிப்படு கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சனாதான சக்திகளை எதிர்த்து குரல் கொடுத்த தந்தை பெரியார் வழியில் நின்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும். மூட பழக்க வழக் கங்களை எதிர்த்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்வோம், மதவெறி சக்திகளை தனிமைப் படுத்த மதச்சார்ப்பற்ற சக்திகளை பலப்படுத் தும் மண்ணாக தமிழ் மண்ணை மாற்றுவதற் கான முயற்சியை மேற்கொள்வோம், அவரது கொள்கைகளை மேலும் மேலும் முன்னெடுக்க அவரது நினைவு நாளில் உறுதி யேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.