கும்பகோணம், மே 3- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அர சினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) மாண வர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கிட, சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழ கன் ரூ.10 லட்சம் நிதி வழங்கி அறக்கட் டளை நிறுவினார். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தன்னாட்சியில் ஏப்ரல் 29 அன்று கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை யில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்து கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர் நா.தன ராஜன் சட்டமன்ற உறுப்பினர் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க ஏற்பாடு செய்யு மாறு கோரிக்கை வைத்தார். விழாவில், ரூ.10 லட்சம் என் சொந்த பணத்தில் அறக்கட்டளை அமைப்பதாக வும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங் களில் முதலிடம் பெறும் மாணவ, மாணவி யர்களுக்கு இரண்டு தங்கப்பதக்கம் வழங்குவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் உறுதி அளித்தார். இதை நிறைவேற்றும் வகையில், புத னன்று கல்லூரி முதல்வரிடம் ரூ.10 லட் சத்திற்கான காசோலையையும் அறக்கட் டளை நிறுவ கோரிக்கை கடிதத்தையும் அளித்துள்ளார். கல்லூரி முதல்வர் நா.தனராஜன், நிதி யாளர் கமல் ஆனந்த், கண்காணிப்பாளர் ந.முத்துக்குமரன் ஆகியோர் காசோலை யை பெற்றுக்கொண்டு சட்டமன்ற உறுப்பி னருக்கு கல்லூரியின் சார்பில் நன்றியைத் தெரிவித்தனர்.