260 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டும் ஆணை வழங்கல்
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில்
தஞ்சாவூர், மே 19- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மருங்கப்பள்ளம் பல்நோக்கு சேவை மையக் கட்டடத்தில், தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், 41 நரிக்குறவர் இன பயனாளிகள் உள்ளிட்ட, 260 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை வழங்கி, தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களை விளக்கி, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் உரையாற்றினார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சோ. நாகேந்திரன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.மனோகரன் நன்றி கூறினார்.