கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை, அக்.15 - 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீ தம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டு மென தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 2 ஆவது மாநாடு புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் இரா.சரவணன் தலைமை வகித்தார். என்.ஜீவகாருண்யன் கொடியேற்றினார். ஏ.கணேசன் வர வேற்றார். கு.தனலெட்சுமி அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். மாவட்டச் செயலாளர் கா. ஜெயராமன், பொருளாளர் நா.கிருஷ்ணன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ந.பர்வதராஜன் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் க.கருப்பையா நிறை வுரையாற்றினார். ஜி.சரஸ்வதி நன்றி கூறினார். அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி அனைத்து சிகிச்சைகளுக்கும் செலவுத் தொகையை மீளப்பெறும் வகை யில் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். குடும்ப நலநிதியை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு இணையாக மருத்துவப் படியை ரூ. 1000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். விராலிமலை தாலுகாவில் துணைக் கருவூல அலுவலகம் அமைக்க வேண்டும். அரிமளம் ஒன்றியத்தை தனி தாலுகாவாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
