tamilnadu

img

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக சிறு, குறு, நடுத்தர தொழில்களை நசுக்கும் பாஜக அரசு

கோவை, டிச.20– கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்ப்பதற்கும், அதன் நலனை பாதுகாப்பதற்கும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு கேந்திரமாய் இருக்கிற சிறு, குறு, நடுத்தர தொழில்களை படு குழியில் மோடி தலைமையிலான பாஜக அரசு தள்ளுகிறது என கோவையில் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். தொழிற்சாலைகளுக்குத் தேவை யான மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் ஒரு நாள் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது. இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரி வித்து, கோவை சிவானந்தா காலனி பவர்ஹவுஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சிறு, குறு தொழில்களை பாதுகாக்கவும் தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித் தும் ஆவேச முழக்கங்கள் எழுப்பப் பட்டன. 

முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநா பன், மூத்த தலைவர்கள் யு.கே.வெள்ளிங் கிரி, எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூலப்பொருட்களின் விலை உயர் வால் தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மேலும், கார்ப்பரேட் நிறு வனங்களுக்கும், குறுந்தொழில் நிறுவ னங்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் குறுந் தொழில் முனைவோர்கள் கடுமையா கப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற ஒன்றிய அரசின் மோசமான பொரு ளாதார நடவடிக்கையின் காரணமாக சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏழு வரு டங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் 10.5 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களில் அதானியின் சொத்து மதிப்பு 756 சதவிகிதமும், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், மறுபுறம் சிறு தொழில்கள் மூடப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில்தான் இந்த மூலப்பொருள் விலை உயர்வும் உள்ளது. இதன் கார ணமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் கூடங்கள் மூடப் ட்டுள்ளன. இது தொழில்முனைவோர் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, இந்தி யாவின் மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும். வேலை வாய்ப்பு பறிபோகும்.

மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்  என தொடர்ந்து இந்த தொழில் முனை வோர்கள் கோரிக்கை வைத்தும், ஒன்றிய மோடி அரசு செவிசாய்க்க வில்லை. ஆகவே வேறுவழியின்றி இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுகின்றனர். கார்ப்பரேட்டு களின் நலனுக்காக இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணை யாக உள்ள, வேலை வாய்ப்பை தருகிற சிறு, குறு, நடுத்தர தொழில்களை படு குழியில் மோடி அரசு தள்ளுகிறது. ஆகவே நாடு தழுவிய போராட்டத் தில் ஈடுபட்டுள்ள இந்த தொழில் முனைவோர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. இவர்களுக்கு ஆதர வாக நாங்களும் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம். இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் தொழில் முனை வோர்களுக்கு ஆதரவாக கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது என்றார்.