tamilnadu

img

ஓவியர் விவன் சுந்தரம் காலமானார்

பிரபல ஓவியர் விவன் சுந்தரம் கடந்த  புதன்கிழமை காலமானார். அவ ருக்கு வயது 79.  கடந்த மாதம் மூளை யில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கால மானார்.  இவரது ஓவியங்கள் ஆழ்ந்த கருத்துகளை உள்ளடக்கியவை. இவர் ஓவியங்கள் மூலம் பல்வேறு சமூக நீதியை வெளிப்படுத்தியுள்ளார். விவன் சுந்தரத்தின் ஆசிரியரும், ஓவியருமான குலாம் முகமது ஷேக் கூறுகையில், “1961 முதல் 1965 வரை பரோடா எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் விவன் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது செயல்பாடுகள் என்னை பல வகையில் ஈர்த்தன. பல்கலை.யில் அவர் சேர்ந்தது முதல், என்னுடைய மிக நெருங்கிய நண்பராகவே இருந்தார். பன்முக கலாச்சார இந்தியாவில், கலை ஞர்கள் சமூகத்தின் குரலாக அவர்  திகழ்ந்தார். மேலும், சகமத் (SAH MAT)-ன் நிறுவனர்களில் விவனும் ஒருவர்” என்றார்.  இவர் 1943 ஆம் ஆண்டு சிம்லா வில் பிறந்தார். ஓவியங்களை வளர்த்தெ டுப்பதற்கு விவன் தெளிவான நோக் கத்துடன் பணியாற்றினார்.

ஓவியத்தில் இடம்பெற்ற கருத்தின் தோற்றம் மற்றும் வார்த்தைகள் அனைத்தும் இவரின் சொந்த அனுபவத்திலிருந்து வெளிப்பட்டவை. கலாச்சார மறு மலர்ச்சியாக திகழ்ந்த இவரது ஓவி யங்களை பாராட்டி, 1960-களில் லண்டன் ஸ்லேட் ஸ்கூல் ஆப் ஃபைன் ஆர்ட்ஸ் கல்வி நிறுவனம் இவருக்கு ‘பொதுவுடமை கலைஞர்’ என்ற பட்டத்தை வழங்கியது. அமெரிக்க பாப் ஓவியர் ஆர்.பி.கிதாஜ்-இன் ஓவியங்கள் விவன் சுந்தரத்தை பெரிதும் ஈர்த்தன. பின்னர் அவருடன் நெருங்கிய நட்பு கொண்டார்.  மேலும், முதலாளித்துவம், ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் மற்றும் அரசியல் கூட்டங்க ளில் விவன் கலந்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு தில்லி கிரண் நாடார் ஓவிய அருங்காட்சியகத்தில் நடந்த பின்னோட்ட நிகழ்வில், விவன் சுந்தரத்தின் ‘குட்டோ’ (Guddo) மற்றும் ‘மக்கள் வந்து செல்கின்றனர்’ (People come and go) ஆகிய 2 ஓவி யங்கள், அவரது முக்கிய படைப்பாக திகழ்ந்தன. “விவனின் மறைவு ஆழ மான இடைவெளியை ஏற்படுத்தியி ருக்கிறது” என்று அவரது தோழி நளினி மலானி வருத்தம் தெரிவித்துள்ளார். விவன் சுந்தரத்தின் மனைவி கீதா  கபூர், கலை வரலாற்றாசிரியர் மற்றும் கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

நாட்டின் உன்னத மக்கள் கலைஞர்க ளில் ஒருவரான தோழர் விவன் சுந்தரம் மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது.  தோழர் விவன் சுந்தரம், தொழிலா ளர் வர்க்கத்தின் நலன்களுக்காகவும், மக்களின் லட்சியங்களை நிறை வேற்றுவதற்காகவும் தன்னை முழு மையாக அர்ப்பணித்துக்கொண்டவரா வார். அன்னாரது குடும்பத்திற்கும் அவ ருடைய நண்பர்களுக்கும் அரசியல் தலைமைக்குழு தன்  ஆழ்ந்த இரங்கல் களைத் தெரிவித்துக்கொள்கிறது.  (ந.நி.)