tamilnadu

img

விருதுநகர் அருகே குப்பாம்பட்டியில் ஆநிரை நடுகற்கள் கண்டுபிடிப்பு

விருதுநகர் அருகே குப்பாம்பட்டியில் ஆநிரை நடுகற்கள் கண்டுபிடிப்பு

விருதுநகர், ஏப்.30- விருதுநகர் அருகே உள்ள குப் பாம்பட்டி கிராமத்தில் கல்வெட்டுடன் ஆநிரை  கூடிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. விருதுநகர் அருகே உள்ளது குப்  பாம்பட்டி கிராமம்.  இங்கு, பாண்டியநாடு  பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய் வாளர்களான ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே இடத்தில் வெவ்வேறு  வகையான நடுகற்கள் இருந்தது கண்ட றியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கள் கூறுகையில், இங்கு ஆநிரை பூசல் தொடர்பான நடுகற்களும், இரண்டு பாம்பு  கொத்தி பட்டான்கல் நடுகற்களும், இரண்டு  ஆநிரை வளர்ப்போர்க்கான நடுகற்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஆநிரை பூச லானது நமது முன்னோர்களின் தொடக்க  கால போர் முறைகளில் ஒன்றாகும். எதிரி  நாட்டின் வளங்களில் ஒன்றான கால்நடை களை கவர்ந்து செல்வதும், அதனை மீட்ப தும் சங்ககால சிறந்த போர் முறைகளில் ஒன்று. அவ்வகையான பூசல் இந்த பகுதி யில் நடைபெற்று வந்ததற்கான சான்றாக இந்த நடுகற்களைப் பார்க்கலாம். இந்த ஆநிரை தொடர்பான  நடுக்கல்லில் வீரனும் அவரது மனைவியும்  அமர்ந்த கோலத்தில் புடைப்புச்  சிற்பமாக செதுக்கியுள்ளனர். வீரனின்  கையில் போர் வாளும் காலடியில் இரண்டு மாடு இடம்பெற்றுள்ள தால் அது தொடர்பான சண்டையில் இவ்வீரன் இறந்திருக்கலாம் என்றும், தனது  கணவன் இறந்ததன் காரணமாக மனைவி  உடன்கட்டை ஏறி இருக்கலாம் என்ற அடிப்ப டையில் இருவருக்கும் நடுகல் எடுத்து இப்பகுதியினர் வழிபட்டு வந்துள்ளனர்.   இதே இடத்தில் இரண்டு ஆநிரை வளர்ப்பவர்களின் நடு கற்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் இரு கரங்களை கூப்பி வணங்கியவாறு நின்ற கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளனர். காலடியில் மாடு இடம்பெற்றுள்ளது. மாட்டினை கயிறு மூலம் கட்டி அக்கயிற்றினை தனது கையில்  சுற்றியவாறு இடம் பெறுவதால் அம்மாட் டின் உரிமையாளராக கருதலாம். இதே போன்று மற்றொரு நடுகல்லும் அருகில் காணப்படுகிறது. இரண்டு நடு கற்களிலும் தலைப்பகுதிக்கு மேற்புறமாக தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் மற்றும் இரண்டு பாம்பு  கொத்தி பட்டான்கல் நடுகற்களும் காணப்  படுகின்றன. ஒன்றில் பாம்பை கொன்ற வீர னுக்கும்,  வீரனைக் கொன்ற பாம்பிற்கும் இங்கு நடுகல் எடுத்துள்ளனர். மேலும் இந்நடுகற்களின் வடிவ மைப்பை வைத்து பார்க்கும்போது 17- 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்து நடுகற்களாக இருக்கலாம் என தெரிவித்தனர்.