திருப்பூர், அக். 17 – வெள்ளகோவிலில் அரசு அலு வலக வளாகத்திலேயே ஆதிக்க குணத்துடன் அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பால் இடித்து அகற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தாராபுரம் கோட்டம், வெள்ளகோவிலில் உதவி கோட்டப்பொறியாளர் அலு வலக வளாகத்தில் பயணியர் விடுதி அமைந்துள்ளது. இந்த பயணி யர் விடுதியின் காவலர், அருகா மையில் இருக்கும் தனது குடியி ருப்பில் இருந்து நேரடியாக பயணி யர் விடுதிக்கு வருவதற்கு நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பாதையை மறித்து திடீரென சுவர் எழுப்பியுள்ளனர். அரசு அலுவலக வளாகத்திலேயே இது போல் தீண்டாமைச் சுவர் எழுப்பி, ஊழி யரை மனரீதியாக துன்புறுத்தி யது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் கவனத்திற்கு கொண்டு வரப் பட்டது. அது குறித்து பேசி சுமூக தீர்வு ஏற்படுத்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் முயற்சி செய்தனர். இதற்காக உதவிக் கோட்டப் பொறி யாளர் எம்.ரவிச்சந்திரனை நேரில் சந்திக்கச் சென்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வா கிகளையே, “நீங்கள் எந்த சாதி யைச் சேர்ந்தவர்கள்?” என்று கேட்டு உதவிக் கோட்டப் பொறியா ளர் வன்மத்துடன், அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளார். அவர் தீண்டாமை நோக்குடன் செயல்பட்டார் என்பதற்கு அவரின் நேரடி நடவடிக்கையே சாட்சிய மாக அமைந்தது. இந்நிலையில் பொறியாளர் எம்.ரவிச்சந்திரன் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும், தீண் டாமை நோக்குடன் எழுப்பப்பட்ட சுவரை இடித்து, ஏற்கெனவே இருந்த பாதையை மீட்டு சரி செய்து தர வேண்டும் என்பதை வலியு றுத்தி போராட்டம் நடத்த அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்தது. அக்டோபர் 14 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியா ளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோரை சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகி கள் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினர்.
அத்துடன் புதனன்று தீண்டா மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளகோ வில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்ட னர். இதைத் தொடர்ந்து அன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர், சங்கத் தலைவர்களை பேச்சுவார்த் தைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பினார். இதையடுத்து, தாராபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எ.ராணி, மாவட்டச்செய லாளர் மா.பாலசுப்பிரமணியன், மாநிலச் செயலாளர் ஆ.அம்சராஜ், மாவட்ட துணைத்தலைவர் எஸ். மதன்குமார், மாவட்ட இணைச் செயலாளர்கள் எம்.மேகலிங்கம், தா.வைரமுத்து, மாவட்டத் துணைத் தலைவர்கள் அன்னபூரணி, டி.புஷ்பவல்லி, அரசு ஊழியர் சங்க தாராபுரம் வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார், செயலாளர் இல.தில்லையப்பன், பொருளாளர் கே.ஆறுமுகம், காங்கேயம் கிளைத்தலைவர் எஸ்.சுமதி, துணைத்தலைவர் ஜெ.ரவி, இணைச் செயலாளர் மணிவேல், செயற்குழு உறுப்பினர் நாட்ராயன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
இப்பேச்சுவார்த்தையில், மனி தனை மனிதனாக பாவித்து நடத்த வேண்டும், தீண்டாமை நோக்குடன் அரசு அலுவலரே செயல்படுவது தவிர்க்கப்பட வேண்டும், மனரீதி யாக துன்புறுத்தும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும், தீண் டாமை நோக்குடன் எழுப்பப்பட்ட சுவரை இடித்து சரி செய்து பயணி யர் விடுதிக் காவலர், தனது குடி யிருப்பில் இருந்து பயணியர் விடு திக்கு நேரடியாக செல்லும் வகை யில் பாதை அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. சங்கத்தின் சார்பில் முன்வைக் கப்பட்ட அனைத்து அம்சங்களும் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதனன்று நடைபெற இருந்த தீண்டாமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், போராட்ட வெற்றி விளக்கக் கூட்ட மாக நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பே, பயணி யர் விடுதிக்கு அதன் காவலர் நேரடியாக வருவதற்கு ஏற்ப, தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டு, பாதை அமைக்கும் பணிகள் தொடங் கின. இது அரசு ஊழியர் சங்கத் தின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி ஆகும். தீண்டாமை நோக்குடன் செயல் படும் அலுவலர்கள் மீது நடவ டிக்கை எடுக்கும் முறையில் அரசு ஊழியர் சங்கம் முன்னெடுத்த இயக்க நடவடிக்கையை வெற்றி பெறச் செய்த அனைத்து மாவட்ட நிர்வாகிகள், வட்டக் கிளை நிர்வாகி கள், அரசு ஊழியர்கள் அனைவரை யும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்ட மையத்தின் சார்பில் பாராட்டி வாழ்த்துவதாக திருப்பூர் மாவட்டத் தலைவர் அ.ராணி, மாவட்டச் செயலாளர் மா.பால சுப்பிரமணியம் ஆகியோர் தெரி வித்துள்ளனர்.