அகர்தலா, பிப். 7 - “பிஜேபி ஹட்டாவோ! திரிபுரா பச்சாவோ!” (பாஜக-வைத் தோற்கடி யுங்கள்! திரிபுராவைக் காப்பாற்றுங்கள்!) என்ற உரத்த முழக்கம் திரிபுரா தலைநகர் அகர்தலா எங்கும் எதிரொலிக்கிறது. விரை வில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வுள்ள திரிபுராவில் அந்த மாநிலம் முழு வதும் பேரணிகளும் பெரும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தநாள் முதல் அந்த மாநிலத்தில் ஜனநாயகம் துவம்சம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சியி னர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து கடந்த 4-ஆம் தேதியன்று அகர்தலாவில் பெரும் பேரணி நடத்தினர்.
பிரச்சார நிகழ்ச்சிகளில் மாணிக்சர்க்கார்
வரும் 16-ஆம் தேதியன்று தேர்தல் நடை பெறவுள்ள திரிபுராவில் விரிவான அளவில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சாரம் நடத்து கிறது. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் களுக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைக் கிறது. போர்ஜல சட்டமன்றத் தொகுதியில் இடதுசாரி வேட்பாளர் சுதீப்சர்க்கார்க்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் மாணிக்சர்க்கார் பிரச்சாரம் செய்தார். இங்கு 5-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பேரணிப் பொதுக்கூட்டத்தில் மாணிக் சர்க்கார் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து பாஜக-வின் குண்டாயிஸத்தைத் தோல்வியுறச் செய்யுங்கள் என்று மக்களுக்கு வேண்டு கோள் விடுத்தார். அடுத்து, பிரதாப்கட் தொகுதியில் மாணிக்சர்க்கார் பிரச்சாரம் மேற்கொண் டார். இங்கு இடதுசாரி வேட்பாளர் ராமு தாஸ்க்கு ஆதரவாக நடைபெற்ற ‘பைக்’ பேரணியை மாணிக்சர்க்கார் துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் செங்கொடிகளுடன் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அடுத்து அமர்புரா தொகுதியில் போட்டியிட்டுள்ள இடதுமுன்னணி வேட்பாளர் பரிமள்தேவநாத்தை ஆதரித்து நடைபெற்ற ‘பைக்’ பேரணியையும் மாணிக்சர்க்கார் துவக்கிவைத்தார்.