tamilnadu

img

மிசோரம் பால விபத்தில் பலியானவர்களுக்கு சிபிஎம், சிஐடியு அஞ்சலி

பாஜக கூட்டணி ஆளும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தின் தலைநகர் ஐஸ்வாலுக்கு அருகே குருங் ஆற்றில் பைராபி மற்றும் சாய்ராங் ரயில் நிலையங்களை இணைக்க 104 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் கடந்த புதனன்று இடிந்து விழுந்தது. இந்த கோரச் சம்பவத்தில் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்கள் 23 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் தொழிலாளிகள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த தொழிலாளர்களில் 18 பேரின் உடல்கள் சனியன்று இரவு மால்டாவுக்கு கொண்டு வரப்பட்டன. தொழிலாளர்களின் உடல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக சிபிஎம், சிஐடியு தலைவர்கள் உறுதியளித்தனர்.