கீழடியில் அருங்காட்சியகம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. கண்டறியப் படும் பொருட்கள் இங்கேயே காட்சிப் படுத்தப்பட உள்ளன. இந்தாண்டு அகழாய்வுப் பணிகள் தொடங்குவதற்கான அறிவிப்பை தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று அறிவித்துள்ளார். தமிழனின் தொன்மையை பாது காப்பது அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நம் அனைவரு டைய கடமை. அதே நேரத்தில் கீழடி அகழாய்வுத் தளத்தில் பணியில் ஈடுபட்டுள்ள ஆண் கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை யையும் பணியையும் ஆவணப்படுத்தி யுள்ளார். சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல கத்தில் சென்னை புகைப்பட பைனாலே (சிபிபி) பதிப்பு-III இன் ஒரு பகுதியாக ஆண். பெண் தொழிலாளர்களின் பணி கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன ‘கீழடி’ என்ற தலைப்பில் கலைஞர் வி.சரண்ராஜின் புகைப்படங்கள், அகழ்வாராய்ச்சியில் இந்தத் தொழி லாளர்களின் பங்கை ஆவணப்படுத்தி யுள்ளன. தொழிலாளர்கள் தளத்தை அளப் பது, தோண்டுவது, ஆய்வு செய்வது,
வரலாற்றுப் பொருட்களை அணுகு வது, கவனமாக சேகரிப்பது, சுத்தம் செய்வது ஆகியவற்றையும் இதற்காக தொழிலாளர்கள் பயன்படுத்திய கருவிகளையும் புகைப்படம் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார். இது குறித்து வி.சரண்ராஜ் கூறி யிருப்பதாவது:- 2019- ஆம் ஆண்டு ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட் கள் மக்களின் பார்வைக்காக வைக் கப்பட்டபோது, நமது பண்டைய கடந்த காலத்தைப் பற்றி ஆர்வமாக அந்த இடத்தைப் பார்வையிட்ட பலரில் நானும் ஒருவன். தளத்தில் பணியாற் றும் தொழிலாளர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண் டேன். அதன் மூலம் எத்தனை தொழி லாளர்களின் கைகள் இந்த வரலாற்றுப் பொருட்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன” என்பதை அறிந்து கொள்ள முடிந்தது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நான் கீழடி அகழாய்வுப் பணி தொழிலா ளர்கள் குறித்து ஏற்கனவே அறிந்திருந் ததால் எனது கோரிக்கையை சென்னை புகைப்பட பைனாலே ஏற்றுக்கொண் டது. அதற்காக எனக்கு மானியம் வழங்கியது. தொழிலாளர்களின் பணி யை ஆவணப்படுத்துவற்காக கீழடி ஊராட்சியில் ஒரு வீட்டை சுமார் ஒரு வருடத்திற்கு முன் வாடகைக்கு எடுத் தேன், அங்கு தங்கியிருந்து தொழி லாளர்கள் அகழாய்வுத் தளத்தில் எவ்வாறு தங்கள் பணியைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்பதை அறிந்தேன். இப்பணியில் கீழடியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஈடுபட்டிருந்தனர் என்றார். தான் எடுத்த படங்களில் 25 சத வீதத்தை மட்டுமே காட்சிப்படுத்தியுள் ளேன். மேலும் இதற்கு எந்த வகை யில் சிறப்புச் சேர்க்கலாம் என யோசித்து வருகிறேன் என்றார். புகைப்படம் உதவி:
வி.சரண்ராஜ்