tamilnadu

img

சிறந்த முறையில் ரத்த தானம் முகாம் நடத்திய வாலிபர் சங்கம், சிஐடியு-விற்கு ஆட்சியர் பாராட்டு

புதுக்கோட்டை, அக்.29 - சிறந்த முறையில் ரத்த தானம் செய்தமைக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் சிஐடியு தொழிற் சங்கத்திற்கு புதுக்கோட்டை ஆட்சியர் மு.அருணா பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டி னார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை யொட்டி, தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு திங்களன்று பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் கலந்துகொண்ட மாவட்ட  ஆட்சியர் மு.அருணா, சிறப்பாகப் பணி யாற்றிய பல்வேறு ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றி தழ்கள் மற்றும்  நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.கலைவாணி உள் ளிட்டோர் உடனிருந்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பாக மாவட்டத் தலைவர் ஆர்.மகா தீர், நகரச் செயலாளர் ஆர்.தீபக், வாலிபர் சங்க ரத்த தானக் கழக மாவட்ட  அமைப்பாளர் எம்.ஜீவா ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப்  பரிசைப் பெற்றுக் கொண்டனர். அதேபோல ரத்த தான முகாமை சிறப்பாக நடத்திக் கொடுத்த சிஐடியு  தொழிற்சங்கத்திற்கு மாவட்ட ஆட்சியர்  மு.அருணா நினைவுப் பரிசு வழங்கி னார். பரிசை, சிஐடியு மாவட்டத் தலை வர் கே.முகமதலிஜின்னா, துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.