tamilnadu

கடன் தவணை, வட்டி செலுத்த கால அவகாசம் வழங்குக

சென்னை,டிச.14- புயல், மழை வெள்ளத்தால் பாதி க்கப்பட்ட மக்களை பாதுகாத்திட கடன் தவணை, வட்டி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கி றார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதா வது:- மிக்ஜம் புயல் மற்றும் மழை- வெள்ளத்தால் சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்க ளின் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடிந்த நிலையில், அவர்களின் வாழ் வாதாரத்தின் மீதான தாக்கம் இன்னும் தொடர்வதாகவும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்காக திரும்பவில்லை. புயல் பாதிப்புக்குள்ளான மக்கள், வணிக நிறுவனங்கள் பல்வேறு நோக்க ங்களுக்காக வங்கிகளால் கடன்களை பெற்றுள்ள நிலையில், தங்களது நிலு வைத் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்போது தவிக்கின்றனர். இந்த நெருக்கடியிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணை கள் தளர்த்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது. 

அனைத்து வணிக வங்கிகள், கூட்டு றவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறு வனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள அனைத்து காலக் கடன்களுக்கும், 2023 டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி 29 வரை தவணைத் தொகையை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து, கடன் தவணையையும், வட்டி யையும் செலுத்துவதில் மூன்று  மாதங்கள் ஒத்திவைக்க அனுமதிக்கப் படலாம். எனவே, பிரச்சனையின் அவ சரத்தை கருத்தில் கொண்டு, இந்த  விஷயத்தில் ஒன்றிய நிதியமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு,  பாதிக்கப்பட்ட மக்களின் திருப்பிச்  செலுத்தும் சுமையைக் குறைக்கும் வகையில், தேவையான உத்தரவு களை உடனடியாக பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்திருக்கிறார்.

மீனவர்கள் - படகுகளை விடுக்க கோரிக்கை

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.  ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிச.14 அன்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம்,ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இயந்திரப் படகின் மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை குறிப்பிடும், கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம் என கவலைபடத் தெரி வித்துள்ளார்.

இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து, ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகு கள் இலங்கை வசம் காவலில் உள்ளது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டு ள்ளார். எனவே, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடி யாக தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.