அறந்தாங்கி, ஜூன் 18- தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்தது இந்த நிலையில் தடைக்காலம் முடிந்து சனிக்கிழமை அதிகாலை கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெக தாப்பட்டினம் மீனவர்கள் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சனிக் கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஞாயிறு காலை கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், “ தடைக் காலத்திற்கு பிறகு மீன் வரத்து அதி கமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை யோடு சென்றோம். சராசரியாக ஒரு விசைப்படகில் 300 லிருந்து 350 கிலோ வரை இறால் வரத்து இருக்கும். ஆனால், ஒரு விசைப்படகுக்கு 100 முதல் 120 கிலோ தான் கிடைத்துள் ளது எனக் கூறினர். இந்தாண்டு தடைக்காலம் தங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்ததாகக் கூறிய மீனவர்கள், செலவு செய்த டீசல் பணத்திற்கே மீன் கிடைக்கவில்லை. மீன்பிடித் தடைக் காலத்தில் மழை பெய்தால் மட்டுமே மீன் அதிகமாகக் கிடைக் கும். அதே வேளையில் மீன்பிடி தடைக் காலத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து மழைக் காலங்களில் வைத்தால் மீன்கள் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும், மீன்களும் கூடுதலாகக் கிடைக்கும் என்றனர்.
தஞ்சாவூர் மீனவர்கள்
தடைக்காலம் முடிந்து 14ஆம் தேதி கடலுக்கு செல்லாமல் 17ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் பகுதி விசைப்படகு மீனவர்கள் கட லுக்குச் சென்றனர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கரைக்குத் திரும்பினார். அவ்வாறு மீன் பிடித்து திரும்பிய மீனவர்கள் வலையில் போதிய அளவு மீன்கள் பிடிபட வில்லை. கோழித்தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் எனப்படும் பொடி மீன்களே அதிகளவில் சிக்கி யது. ஓரளவு இறால்கள், கணவாய் மீன்கள், நண்டுகள் மீனவர்கள் வலையில் சிக்கியது. ஆனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்த அளவே இறால், நண்டு, கணவாய் மீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்த தால் அதிகளவில் மீன்கள் வரும், வாங்கலாம் என திரளான வியா பாரிகள், பொதுமக்கள் மல்லிப்பட்டி னம் மீன்பிடி இறங்கு தளத்தில் குவிந்தனர். ஆனால் போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்ற மடைந்து திரும்பினர். ஒவ்வொரு விசைப்படகு மீன வரும் எரிபொருளுக்காக ரூ.20 ஆயி ரம், தொழிலாளர்கள் செலவு 10 ஆயிரம் என 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மீன்பிடித்து கரைக்கு திரும்பினால், பிடிபட்ட மீன், இறால், கணவாய்களை விற் றால், இருபதாயிரம் மட்டுமே கிடைத்தது. ஒவ்வொரு விசைப்பட குக்கும் பத்தாயிரம் முதல் 20 ஆயி ரம் வரை நட்டம் ஏற்படுகிறது. அரசு மானிய விலை டீசலை அதிகரித்து வழங்க வேண்டும். கடல் உணவுப் பொருட்களை தனியார் ஏற்றுமதி நிறுவனங்கள் தங்க ளுக்குள் சிண்டிகேட் அமைத்து மீனவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இத னால் மீனவர்கள் பெருமளவில் நஷ்டமடைகின்றனர். மீன்பிடி தடைக் காலத்தால் கடந்த 22 வருடங்களாக எவ்விதப் பலனும் இல்லாமல் உள்ளது. எனவே மீன்பிடி தடைக்காலத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஏப்ரல் - மே மாதம் என்பதை, மீன வர்கள் கடலுக்குச் செல்ல முடியாத மழைக் காலங்களான அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு மாற்றிய மைக்க வேண்டும் என்கின்றனர் மீனவர்கள்.