பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ரத்து அறிவிப்பு முதலாளி நண்பர்களுக்காக ஜனநாயகப் படுகொலை!
மதுரை, செப். 11 - கனிமச் சுரங்கத் திட்டங்களுக்கு இனிமேல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படாது என ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப் பது, ஜனநாயகப் படுகொலை என்றும், மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இது தொடர்பாக அறிக்கையில் ஒன்றில் கூறியிருப்பதாவது: அணுக் கனிமங்கள் உள்ளிட்ட முக்கியக் கனிமங்களை அகழ்ந்தெ டுக்கும் சுரங்கத் திட்டங்களுக்கு இனி மேல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படாது என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருப் பது ஜனநாயகப் படுகொலையாகும். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்ப தற்கான அனுமதியை ஒன்றிய அரசு வேதாந்தா குழுமத்திற்கு வழங்கியதைக் கண்டித்து, மதுரை மக்களுடன் சேர்ந்து மாபெ ரும் போ ராட்டங்களை முன்னெத் தோம். நாடாளுமன்றத்திலும், நிலைக்குழுவிலும் இப்போராட்டம் தொடர்ந்தது. அதனடிப்படையில், 2025 ஜன வரி 24இல் இந்த ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்திருந்தது. ஜனநாயக நடைமுறையை முடக்குவது சட்டவிரோதம் இப்போது டங்ஸ்டன் உள்ளிட்ட முக்கியக் கனிமங்களை அகழ்ந்தெடுக் கும் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதி லிருந்து ஒன்றிய அரசு விலக்களித் துள்ளது. மேலும் இதுபோன்ற திட்டங் களுக்கான சுற்றுச்சூழல் அனு மதிக்கான விண்ணப்பங்களை ஒன்றிய அரசே பரிசீலித்து வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்கள் குறித்துப் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறுவது மிக அவசியமானதாகும். அத்தகைய ஜனநாயக நடைமுறையை முடக்கு வது சட்டவிரோத நடவடிக்கையாகும். மாநில அரசுகளின் உரிமைகள் பறிப்பு கனிமங்களை அரியவகை கனி மங்கள் என்று பட்டியலிட்டு அதனை ஏலம் விடும் உரிமையை மாநில அரசு களிடமிருந்து பறித்த மோடி அரசு, இப்பொழுது சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் உரிமையையும் பறித்துள்ளது. இந்தியாவின் கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கவே பாஜக அரசு இதைச் செய்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறி விக்கையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய ஒன்றை, வெறும் அலுவல் உத்தரவு மூலமாக நடைமுறைப் படுத்துவது நாடாளுமன்றத்தின் அதி காரத்தை மீறும் எதேச்சதிகார செய லாகும். பெருமுதலாளி நண்பர்களுக்காக சூறையாடப்படும் வளங்கள் மோடி அரசு தனது பெருமுத லாளித்துவ நண்பர்களுக்காக ஜன நாயக நடைமுறையை, மாநில உரி மையை, நாடாளுமன்ற உரிமையை சிதைக்க முயல்வது முதல் முறை யல்ல. அரியவகை கனிமங்களை யும், அதனினும் முக்கியமான இந்திய ஜனநாயக அடிப்படையையும் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. பெரும் கார்ப்ரேட்டுகளின் மீது மோடி அரசுக்கு இருக்கும் விசுவாசத் திற்கு ஜனநாயகச் சட்டங்களையும், மாநில உரிமைகளையும் பலிகொடுப் பதை ஏற்க முடியாது. ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகம் இவ்வுத்தரவை உட னடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.