tamilnadu

img

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி சிறப்பு ஊக்கத்தொகை

சென்னை,அக்.19-  2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயி களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை  வழங்குவதற்காக ரூ. 247 கோடி  வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள் ளது. இதன்மூலம் 1.20 லட்சம் பேர் பயனடைவர். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் 2024-25 ஆம் ஆண்டு வேளாண் நிதி-நிலை அறிக்கையில், 2023-24 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒன்றிய அரசு 2023-24 ஆம்  அரவை பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலை யான ரூ. 2919.75 யைக் காட்டிலும் கூடுத லாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கிடும் வகையில், ரூ.247  கோடி நிதியை மாநில நிதியிலிருந்து அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது. டன்னுக்கு ரூ.3134.75 அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத் துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவை பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ண யித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, டன் ஒன்று க்கு ரூ.3134.75 விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2023-24 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழ ங்கிய விவசாயிகள் விபரம் சேக ரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்கு நரகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதி யுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.