tamilnadu

img

மயிலாடுதுறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 18 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

மயிலாடுதுறை, பிப்.24- மயிலாடுதுறை மாவட்டம் முழு வதும் உள்ள தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவ சாயிகளிடமிருந்து பெறப்பட்ட 18 லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டை களை ஏற்றிச் செல்ல லாரிகள் வராத தால் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கின்  றன. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயி லாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய வட்டங்களில் மொத்த மாக 170- க்கும் மேற்பட்ட நேரடி நெல்  கொள்முதல் நிலையங்கள் நடப்பு பரு வத்தில் இயங்கி வருகின்றன. இதில்,  100 க்கும் குறைவான நிலையங்களுக்கு மட்டுமே சொந்த கட்டிடம் உள்ளது. பெரும் பகுதி கொள்முதல் நிலையங் கள் திறந்தவெளி, கோயில்கள், சமு தாயக்கூடம், ஊர் பொது இடங்கள் ஆகி யவற்றில் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது திடீரென பெய்யும் மழையால் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்மூட்டைகளும், விற்ப னை செய்ய விவசாயிகள் எடுத்துவந்து காத்திருக்கும் நெல் மூட்டைகளும் நனைந்து நாசமாகும் சூழலே உள்ளது.

தற்போது ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் 8 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேல் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் கூறுகையில், ‘‘ஏற்கனவே கடுமையான மழை வெள்ளபாதிப்பு, அதன் பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த போது பாதிப்பு என விவசாயிகள் பெரும்பாடுபட்டு அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங் களுக்கு எடுத்து வந்தால், அடுக்கி வைக்க இடம் இல்லாமலும், ஏற் கனவே அடுக்கி வைத்துள்ள நெல்  மூட்டைகளை விற்பனை செய்ய முடியா மலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போதுமான லாரிகளை ஒவ்வொரு மையத்திற்கும் முறையாக அனுப்பாததே முக்கிய காரணமாக உள்ளது. சாக்கு பைகள், சணல், தார்பாய்களும் போதுமான அளவிற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே உடனடியாக மாவட்ட ஆட்சி யர் இப்பிரச்சனையில் தலையிட்டு நிர்வாக குளறுபடிகளை சரிசெய்து ஒவ்வொரு மையங்களிலும் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 18 லட்சத்து க்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பது வருத்தமளிக்கிறது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் தெளிவான பதில் இல்லை என்றும் விவசாயிகள் கூறு கின்றனர். மேலும் எப்போது மழை வந்து நெல் மூட்டைகள் நனைந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகளும், பட்டியல் எழுத்தர்களும் உள்ளனர். கடந்த காலங்களில் மூட்டைகள் தேங்கி  கிடந்து மழையில் நனைந்து முளைத்து  வீணாகி போனதெல்லாம் நடந்துள்ளது. எனவே இதுபோன்ற நிலையை உரு வாக்கிவிடாமல் உரிய நடவடிக்கை யை மாவட்ட நிர்வாகம் துரிதமாக எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.