கர்நாடகாவில் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, உணவுத்துறை அமைச்சர் கே.கோபாலையா ஆகியோருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி மற்றும் வேளாண்த்துறை அமைச்சர் பி.சி. பாட்டீல் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் இன்று ட்வீட் செய்துள்ளார். புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களில் ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மற்றோருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கூறியுள்ளார். இருவரும் தங்களுடன் தொடர்பு கொண்டவர்களிடம் பரிசோதனை செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட மற்ற அமைச்சர்கள், வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலா அமைச்சர் சி.டி.ரவி மற்றும் வேளாண் அமைச்சர் பி.சி. பாட்டீல் ஆகியோர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி,அம்மாநிலத்தில் 4.75 லட்சம் பேர் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம், நோய் தொற்றில் இருந்து 7,481 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.