புதுதில்லி:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை திடீரென பலமடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது.இதில், பொதுப்பிரிவு மாணவர் களுக்கான தேர்வுக் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தியுள்ள மத்திய அரசு,பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான கட்டணத்தை 24 மடங்கு உயர்த்தி வஞ்சித்துள்ளது.
சிபிஎஸ்சி பொதுப்பிரிவு மாணவர்கள், இதுவரை 5 பாடங்களுக்குத் தேர்வுக் கட்டணமாக ரூ. 750 செலுத்தி வந்தனர். இது தற்போது ரூ. 1,500 ஆக இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.அதேநேரம் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு 5 பாடங்களுக்கும் சேர்த்து ரூ. 50 மட் டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், மோடி அரசு இந்த கட்டணத்தை தற்போது ரூ. 1200 ஆக உயர்த்தியுள்ளது. இது 24 மடங்கு உயர்வாகும்.
இதேபோல கூடுதல் பாடங்களுக் கான தேர்வுக் கட்டணமும் உயர்த்தப் பட்டுள்ளது. கூடுதல் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 150 விகிதம்பொதுப்பிரிவு மாணவர்கள் கட்டணம் செலுத்தி வந்தனர். இந்த கட்டணம் தற்போது ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பொதுப்பிரிவு மாணவர்களிலிருந்து எந்த வேறுபாடும் இல்லாமல், பட்டியல்மற்றும் பழங்குடி மாணவர்களும் இதேரூ. 300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதற்கு முன்பு, பட்டியல் - பழங்குடி மாணவர்கள் கூடுதல் பாடங்களுக்கு கட்டணமே செலுத்த வேண்டியதில்லை என்று இருந்தது. அது தற்போது மாற்றப்பட்டு, ஒரேயடியாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கு இணையாக ரூ. 300 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
பார்வைத் திறனற்ற மாணவர் களுக்கு மட்டும் தேர்வுக் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவை தவிர, வெளிநாடுகளில் உள்ளசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பதிவு செய்த மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம், ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் பாடத்துக்கான கட்டணமும், ரூ. 1,000-இல் இருந்து ரூ. 2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வுகள் அனைத் தையும் உடனடியாக அமல்படுத்தவும் கல்வி நிலையங்களுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.சிபிஎஸ்இ தேர்வு விதிகளின்படி, 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9-ஆம் வகுப்பு படிக்கும்போதே அதற்கு விண்ணப்பித்து கட்டணங் களைச் செலுத்த வேண்டும். இதேபோலத்தான் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும் 11ம் வகுப் பிலேயே பதிவு செய்ய வேண்டும்.அந்த அடிப்படையில், சிபிஎஸ்இ பள்ளிகள் பழைய கட்டணங்கள் மூலம் ஏற்கெனவே பதிவுகளை தொடங்கி விட்டன. ஆனால், மத்திய அரசோ, இப்போது புதிதாக கட்டணங்களை உயர்த்தி, அதனையும் இந்தாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது.ஏற்கனவே தேர்வுக்கான கட்டணத்தை வசூலித்திருந்தாலும், மீதமுள்ள தொகையை உடனே அந்த மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மீதமுள்ள தொகையை மாணவர்கள் கடைசி நாளுக்குள் கட்டத் தவறினால், 2019-20 தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்றும் பயமுறுத்தியுள்ளது.