சென்னை, ஆக. 28- 3 ஆயிரம் காலிப்பணி யிடங்களை நிரப்ப வலியு றுத்தி வருங் கால வைப்பு நிதி (பிஎப்) ஊழியர்கள் புத னன்று (ஆக.28) ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் செய்தனர். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் சுமார் 18 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இருப்பினும், பி, சி, டி பிரிவு களில் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட காலிப்பணியிங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி சீராய்வு நடத்தப்பட்ட நிலையில் அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி அனைவருக்கும் பய னளிக்கும் வகையில் செயல் படுத்த வேண்டும், பணியிட மாற்றத்திற்கு நிரந்தர கொள்கை வகுக்க வேண் டும், பதவி உயர்வின்றி பல ஆண்டுகளாக பணியாற்றும் குறைந்த ஈட்டுறுதி சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களை அகில இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஊழி யர்கள் சம்மேளனம் ஒருங்கி ணைந்து நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மூன் றாம் கட்டமாக ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை யில் உள்ள மண்டல அலுவ லகத்தில் நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்து வருமான வரித்துறை அதி காரிகள் சங்க பொதுச் செய லாளர் சுந்தரமூர்த்தி, சம் மேளன மண்டலச் செயலா ளர் சந்தோஷ் உள்ளிட்டோர் பேசினர். இப்போராட்டத்தினி டையே செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளன அகில இந்திய பொதுச் செயலாளர் கிருபாகரன், வேலைநிறுத் தத்தில் 128 அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 18 ஆயி ரம் ஊழியர்களும் முழுமை யாக பங்கேற்றுள்ளனர். கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடில் அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.