தரங்கம்பாடி, மே 26- நாகை மாவட்டம், செம்பனார் கோவில் அருகே நரசிங்க நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்க ளுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வா யன்று நடைபெற்றது. 130 மாணவர்களின் குடும்பங்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் ஆசிரியர்களின் சார்பாக ரூ.500 மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் புஷ்பலதா தலைமை வகித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். தலைமையாசிரியர் அல்லிமாமலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வட்டார வளமைய ஆசிரியர் வினித்குமார், ஆசிரியர்கள் மதிவாணன், ஸ்ரீதர், ரவி, சித்ரா, அருணா, ஞானச்செல்வம், சூரியா ஆகியோர் கொரோனா விழிப்புணர்வு வழிமுறைகளை மாணவர்களிடம் எடுத்துரைத்து நிவாரண பொருட்களை வழங்கினர்.