tamilnadu

img

மங்கலம் சாலை திறப்பு

அவிநாசி, மே 14- அவிநாசி பகுதியில் கொரோனா வைரஸ்  காரணமாக அடைக்கப்பட்டிருந்த மங்கலம் சாலை இயல்புநிலைக்கு திரும்பி யதன் காரணமாக வியாழனன்று திறக்கப் பட்டது. அவிநாசி பகுதியில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக வட்டார அளவில் சில தினங்களுக்கு முன்பாக வெளி நாடு மற்றும் வெளி மாநிலத்துக்கு சென்று  திரும்பியவர்களை சுகாதாரத் துறை யினர் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று  பரிசோதனை செய்து, தனிமைப்படுத் தப்பட்டு இருந்தனர். இந்நிலையில், அவிநாசி மங்கலம் சாலை பகுதியைச் சேர்ந் தவருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சாலைகள் அடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குண மடைந்து இயல்புநிலை திரும்பியதன் கார ணமாக அடைக்கப்பட்ட மங்கலம் சாலை திறக்கப்பட்டது.