தேசம் காக்கும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக.22- வருமானவரி வரம்புக்குள் வராத ரேசன் அட்டைதாரர்க ளுக்கு மாதந்தோறும் ரூ.7500 வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் 200 நாட்கள் வேலையும் ரூ.600 கூலி வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஜங்சன் பகுதிக்குழு சார்பில் சனிக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனை, மிளகுபாறை, கோரிமேடு, காம ராஜபுரம், கருடமண்டபம், ஹோட்டல்ஆஸ்பி, கனரா பேங்க் ஆகிய இடங்களில் ஜங்சன் பகுதி செயலாளர் ரபிக்அஹமது தலைமையில் தேசம் காக்கு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழ உறுப்பி னர் வெற்றி செல்வன் பேசினார். இதில் பகுதி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
1,050 லிட்டர் சாராயம் அழிப்பு
சீர்காழி, ஆக.22-சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுத லின்படி 35 லிட்டர் கொள்ளளவு உடைய 30 பிளாஸ்டிக் கேன்க ளில் சுமார் 1050 லிட்டர் பாண்டி எரிசாராயமானது புதுப்பட்டி னம் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னி லையில் சீர்காழி குற்றவியல் நீதித்துறை நடுவர் தரணிதரன் மேற்பார்வையில் புதுப்பட்டினம் காவல் நிலையம் பின்பு றம் உள்ள காலியிடத்தில் குழிதோண்டி கொட்டி அழிக்கப்ப ட்டது. இந்த சாராயம் கடந்த வருடம் போலீசாரால் கைப்ப ற்றப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு முடி வுற்ற பின் அழிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கண்டறிதல் முகாம்
தஞ்சாவூர், ஆக.22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ரயிலடியில், செரு வாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி இணைந்து நடத்திய காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் மற்றும் கொரோனா நோய் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தலை மை கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோ தனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கப்பட்டது. ஆய்வக நுட்பநர் குமரேசன் தலைமையிலான குழுவினர், கொரோனா வைரஸ் உள்ளதா என கண்டறிய சளி மாதிரி களை சேகரித்தனர். இம்முகாமில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 47 பேருக்கு கொரோனா சளிப் பரிசோ தனை செய்யப்பட்டது.
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
கும்பகோணம், ஆக.22 - தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், அய்யம்பேட்டை அடுத்த துளசேந்திர புரத்தை சேர்ந்த கார்த்தி(30) என்பவருக்கும் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் திருமணம் நடைபெற உள்ளதாக சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட சமூக நல அலுவலர் சைல்டு லைன் அமைப்பினர் திருமணத்தை தடுத்தி நிறுத்தினர். சிறுமியை மீட்டு, தஞ்சாவூர் குழந்தை கள் நலக்குழுவில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிறுமியின் தாயார் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், பிரிந்து சென்ற நிலையில், சிறுமி யும், அவரது சகோதரனும் சிறுமியின் அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். அத்தை இருவரையும் மீண்டும் தயாரிடம் ஒப்ப டைத்து விட, குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து வைப்பதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். சிறுமி யின் தாயாருக்கு அதிகாரிகள் கவுன்சிலிங் கொடுத்தனர். பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்வது குற்றம், மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க ப்படும் என எச்சரித்தனர்.
ரத்த தான முகாம்
தஞ்சாவூர், ஆக.22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லி ப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கி ழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை இணைந்து நடத்திய முகா மிற்கு, டிஎன்டிஜே தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக் முகமது தலைமை வகித்தார். முகாமில், தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் ஜெயகார்த்திகா தலைமையிலான குழுவினர் 40 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் சார்பில், சுதந்திர தினம் முதல் தமிழகம் முழு வதும் நடைபெற்று வரும் 90-வது ரத்த தான முகாம் இது என்பது குறிப்பிடத்தக்கது.