திருச்சிராப்பள்ளி, நவ.1- இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 55 வருட ஆண்டுவிழா மற்றும் தோழர் மாசிலாமணி கல்வெட்டு திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துவாக்குடி நகர கிளைகள் சார்பில் வியாழனன்று துவாக்குடிமலையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை வகித்தார். விழாவில் மாசிலாமணி நினைவு கல்வெட்டை சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் திறந்து வைத்தார். கட்சி கொடியை ஒன்றியச் செய லாளர் நடராஜன் ஏற்றி வைத்தார். விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, மாரியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.