tamilnadu

பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம், நவ. 17- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பென்னா கரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரமும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற் றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்  வழங்க வேண்டும். தனியார் நிறுவனங் களில் 5 சதவிகித வேலைவாய்ப்பை உறு திப்படுத்த தமிழக அரசு உடனடியாக அவசர  சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தாடி கிராம நிர்வாக அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் பென்னாகரம் தொகுதி குழு  உறுப்பினர் பி.ஐயனார் தலைமை வகித் தார். இதில், கிளை செயலாளர் வினோத் குமார், சிபிஎம் பகுதி குழு உறுப்பினர் ஆ.ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.