தருமபுரி, அக்.5- பாப்பிரெட்டிப்பட்டி யில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.குமார் வீட் டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட னர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட் டம், ஜங்காலஅள்ளி கிரா மத்தைச் சேர்ந்த விவசாயி காளி மகன் குமார். இவர் சென்னை கே.கே.நகரில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணி புரிகிறார். இந்நிலையில், கே.கே. நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள் ளனர். இதன்பின் மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி யுள்ளனர். இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள ஆய்வாளர் குமாருக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டில் சுமார் 2 மணி நேரம் தருமபுரி டி.எஸ்.பி (பொறுப்பு) கிருஷ்ண ராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடு பட்டனர். இந்த சோதனையில் ஆவணங் கள், பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.