தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் திங்கள்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. பேராவூரணி வாடகைக் கார், வேன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய முகாமை, முன்னாள் பேரூராட்சி தலைவரும், ரெட்கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைப்பாளருமான என்.அசோக்குமார் தொடங்கி வைத்தார். வாடகைக் கார், வேன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்க கௌரவத் தலைவர் தென்னங்குடி ஆர்.ராஜா, ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் 39 யூனிட் ரத்தத்தை கொடை யாளர்களிடம் இருந்து தானமாகப் பெற்றனர். சங்கத் தலைவர் சுப.சரவணன், செயலாளர் ஏ.எஸ்.நீலகண்டன், துணைத் தலைவர் முத்தமிழ், பொருளாளர் கே.கஜேந்திரன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.